2 அக்., 2015

குன்னத்தூரும் குடைவரை கோயில்களும்...

மதுரையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் சிவகங்கைச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வரிச்சியூர் எனும் சிற்றூர். அங்கிருந்து ம.குன்னத்தூர் நோக்கிச் செல்லும் சாலையில் உதயகிரி என்னும் சிறுகுன்று உள்ளது. இக்குன்றின் கிழக்குதிசையில் உதயகிரீஸ்வர் என்னும் குடைவரை கோயிலும் குன்றின் பின்புறம் மேற்குதிசையில் அஸ்தகிரீஸ்வர் என்னும் குடைவரை கோவிலும் அமைந்துள்ளது. குன்றின் வடக்கு திசையில் மிகப்பெரிய இயற்கையான முறையில் அமைந்த குகையில் தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் மற்றும் கற்படுக்கைகள் அமைந்துள்ளன. எண்ணளவு குறித்த கல்வெட்டு இம்மலை குகைத்தள முகப்பில் காணப்படுவது இக்குன்றின் சிறப்பு.
சென்றவாரம் நண்பர்களோடு இக்குடைவரை கோயிலுக்கு சென்று வந்தேன். பயணம் அதிகாலையில் திருமங்கலம், சுங்குராம்பட்டி, வழியாக பழைய விமானநிலையம் சாலையில் சென்றது. இளஞ்சிவப்பு நிறத்தோடு கதிரவன் முகம் காட்டினான். பறவைகள் உணவிற்கான தங்களின் தேடலைத் துவங்கியிருந்து அவைகளோடு நாங்களும் இணைந்து கொண்டோம். வழியெங்கும் மிதமான பனியும் பறவைகளின் ரீங்காரமும்  நிறைந்திருந்தது. வழியில் கண்ட சில கிராமங்களில் பசுமை நிறைந்து இருப்பதைக் காணமுடிந்தது.

6 செப்., 2015

நீர்நிலைகள் நீரைச் சேமிக்கவே...

கண்மாய்கள் இருந்த பகுதிகளில், ஆறுகள் ஓடியப் பகுதிகளில் எல்லாம் இன்று லாரிகள் நீரைச் சுமந்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. கண்மாய்கள், ஏரிகள், குளங்களெல்லாம் மூடப்பட்டு விலை நிலங்கள், சாலைகள், குடியிருப்புப் பகுதிகள், பெரும் அங்காடிகள், அரசு கட்டிடங்கள் என கான்கீரிட் காடுகளாகவே வளர்ந்து நிற்கின்றன. இத்தனைக்கு மத்தியிலும் நீரைச் சேமிக்க வேண்டும், நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற வாசகங்களின் கூக்குரல் உரக்க... உரக்கச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால், அவையனைத்தும் மனிதமற்ற, மரங்களற்ற வெட்டவெளிப் பகுதிகளில் எதிரொலியாக மட்டுமே ஒலித்துக்கொண்டு உள்ளது.

25 ஜூலை, 2015

பராங்குசப் பேரேரியும் ஏழு கண் மடையும்...

இராசபாளையத்தில் ஜூலை 18,19களில் தமிழக தொல்லியல் கழகத்தின் 25ம் ஆண்டுக் கருத்தரங்கு மற்றும் 26வது ’ஆவணம்’ இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவை மதுரையில் செயல்பட்டு வரும் ‘பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்’ ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. கருத்தரங்கில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலம் மற்றும் இலங்கையிலிருந்தும் தொல்லியல் அறிஞர்கள், ஆராய்சியாளர்கள் வந்திருந்தனர். அவர்களுடைய தொல்லியல் கண்டுபிடிப்பு, அகழ்வராய்வுச் செய்திகள், நிழற்ப்படங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

19 ஜூலை, 2015

குத்தால அருவியிலே குளித்தது போல் இருக்குதா...

சரியாக சூன், சூலை மாதங்களில் குற்றால சீசன் தொடங்கிவிடும். ஆகஸ்ட் மாதம் வரை சீசன் குறையாது. தற்போது பருவகால மாற்றங்கள், மழை பெய்யா எனக் குற்றாலத்தில் நீர் வருவதை காண மக்கள் எந்நேரமும் காத்துகிடக்க வேண்டியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மழை பெய்துவிட்டால் குற்றாலத்தைச் சுற்றி உள்ளவர்களுக்கு கொண்டாட்டந்தான். அவர்களுக்குத்தான் முதலில் செய்தி கிடைக்கும் என்பதால் குற்றாலக் குளியல் அவர்களுக்குத்தான் முதல்வசம். பின் அங்கிருந்து செய்தி பரவி வெளியூர் மக்களுக்குச் சென்றடையும்.