5 ஜன., 2014

வேர்களை விட்டு விலகிடாமல் இருந்திடுவோம்...

கிளைகள் எவ்வளவு தூரம் படர்ந்திருந்தாலும் வேர்களைவிட்டு விலகி இருக்க முடியாது. மனிதர்களும் அப்படித்தான். எவ்வளவு தூரம் பொருள் தேட சென்றிருந்தாலும் நம் குடும்பத்தைவிட்டு விலகி இருக்க முடியாது. குடும்ப விழாக்கள், பண்டிகைகளில் கலந்துகொள்ள எங்கிருந்தாலும், வீட்டிற்கு வந்து நம் சுற்றத்தோடு கொண்டாடுவது நம்மவர்களின் பழக்கம். பல்வேறு வகையான பண்டிகைகள் இருந்தாலும் அதில், தைப்பொங்கல் முக்கியமானது. மற்ற பண்டிகைகள் இறைவழிபாட்டோடு தொடர்பு கொண்டிருந்தாலும், பொங்கல் பண்டிகை மட்டும் தனித்து நம்மைக் காக்கும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் திருவிழாவாக அமைந்திருக்கிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையை விதைக்கும் திருநாளாகவும் திகழ்கிறது.

30 நவ., 2013

வைகையில் கரையேறிய திருவேடகம்...

திருவேடகம் என்றாலே தென்னை மரங்கள் தான் நினைவில் நிற்கின்றன. வைகை ஆற்றங்கரையில் தென்னை, வாழை, வெற்றிலை, நெல் என விவசாய நிலங்கள் சூல இயற்கையின் மடியில் திருவேடகம் சிற்றூர் அமைந்துள்ளது. வைகையின் ஆற்றுப் பாசனத்தால் இப்பகுதியை எங்கு நோக்கிலும் செழிமை நிறைந்து காணபடுகிறது. திருவேடகம் ஏடகநாதர் கோயில் மற்றும் வைகையின் சிறப்பை அறிந்துகொள்ளவும் பசுமை நடை குழுவினரோடு ஞாயிறு அதிகாலை எங்கள் ஊர் நண்பர்களுடன் சேர்ந்து சென்று வந்தேன்.  மேலக்காலை அடுத்த வைகை ஆற்றங்கரையில் ஓங்கி வளர்ந்து நின்றிருந்தது தென்னை மரங்கள். கார்த்திகை மாத அதிகாலை மூடுபனியில் கதிரவன் மெல்ல வானில் வந்தான். இளமஞ்சள் நிற வானில் ஓவியமாய் தென்னை மரங்கள் அசைந்து கொண்டிருந்தன.

27 அக்., 2013

கொங்கர் புளியங்குளம் பஞ்ச பாண்டவர் மலை...


மலைகளைக் காண்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் மலைகளை கண்டு வருவது வாடிக்கையாக இருந்தது. மதுரை மாநகரும் நான்கு பக்கமும் மலைகள் சூழ அமைந்துள்ள பெரும் வரலாற்று புகழ் வாய்ந்த பகுதி. இம்முறை மதுரையிலிருந்து தேனி - கம்பம் செல்லும் நெடுஞ்சாலையில் செக்காணூரணிக்கு அருகேயுள்ள கொங்கர் புளியங்குளத்திற்கு சென்று வந்தேன். காரணம் இம்மலையில் 2000 வருடங்கள் பழமையான தமிழிக் கல்வெட்டுகள் இருப்பது என்பதே. விடுமுறை நாளான ஞாயிறு காலை பொழுது ஒன்றில் நண்பர்களோடு சென்றேன்.

26 அக்., 2013

மனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்...

மதுரையில் நண்பர் ஒருவரின் திருமண விழாவிற்க்காக நானும் நண்பரும் சென்றிருந்தோம். மண்டபத்தின் வாயிலில் மணமக்களின் பெயர்கள்கள் அழகாக வடிவமைக்கபட்டிருந்தது. உள்ளே நுழைந்ததும் பெண்கள் கூட்டம் நம்மை சிரித்த முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தது. சிரித்துக் கொண்டே நகர மனமில்லாமல் நகர்ந்தோம். அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த மேடை அரங்கில் மணமகனும், மணப்பெண்ணும் நின்றிருத்தனர்.
உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வரிசையாக மணமக்களுக்கு பரிசுகளை வழங்கியவாறு நிழற்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். நாங்களும் இந்த சம்பிரதாயங்களை வரிசையில் நின்று முடித்துக் கொண்டு சாப்பாடு நடக்குமிடம் நோக்கிச் சென்றோம். கனிவான உணவு பரிமாறல்களுடன் அருமையான அறுசுவை உணவால் வயிறு நிறைந்தது. பால் பாயசத்தின் இனிப்பு நாவினில் கரையாமல் இருந்தது. சாப்பாடு அறையை விட்டு வெளியேறி அரங்கினுள் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். அப்பொழுதான் அந்த காட்சியை காண முடிந்தது. அனைவரது கைகளிலும்,