20 ஏப்., 2014

நஞ்சில்லா உணவை தரும் உழவர்களைத் தேடி...

அதென்ன ? நஞ்சில்லா உணவு. அப்ப நஞ்சு உள்ள உணவு வேற இருக்கா ? இந்த கேள்விகள் தான் எனக்குள்ளும் எழுந்தது. நஞ்சுள்ள உணவு என்பது வேறேதும் இல்லை, இன்று நாம் அதிகம்பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவு தான் நஞ்சு உணவு.
அட, நம்மூர்ள தினமும் ஒரு ஏழையோடோ உணவில் கூட பல கூட்டுகள சேர்த்து திங்கிற பாக்கியம் இருக்குனா, கொஞ்சம் வசதியான ஆட்களோட சாப்பாட்டுல எவ்வளவு கூட்டுக இருக்கும். கூட்டுனா என்னாவா?...

22 மார்., 2014

நீரைத் தேடும் வேர்களாய்... குழாய்கள் !

ட்ர்ர்ர ட்ட்ர்ர் ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஷ்ஷ்ஷ்..ட்ர்ர்ர்... என்னடா இது ஒன்னுமே புரியலேன்னு பார்கிறீங்களா ????
ஆம், கடந்த மூன்று நாட்களாய் இரவு முழுவதும் தூக்கத்தை கெடுத்து, தொடர்ந்து பகல் முழுவதும் விடாமல் என் காதில் விழுந்த ஆழ்குழாய் இடும் இயந்திர (போர்வெல்) ” சத்தத்தின் வெளிப்பாடு தான் இந்த எழுத்துக்கள். எங்கள் தெரு மட்டுமில்லாமல் சுற்றிலும் உள்ள எல்லா இடங்களிலும் 'நீரின் மட்டம்' உறிஞ்சும் மோட்டார் மற்றும் குழாய்களை ஏமாற்றி கொண்டே இருந்திருக்கிறது. அனைவரும் 400, 500, 600 அடி ஆழத்தில் நீரை ஒருவழியாக கண்டு பிடித்திருந்தனர் என்ற செய்தி நம் காதுகளை எட்டியது.
மூன்று நாட்களுக்கு பிறகு...

19 மார்., 2014

பறவைகள் பூமியின் உன்னத ஜீவன்கள்...


பூமியில் பறவைகள் இல்லை என்றால், ஒரே நாளில் பூமி அழிந்துவிடும். ஏனென்றால், பெரும்பாலான பறவைகள் புழு, பூச்சிகளை உணவாக கொள்கின்றன. எனவே, இந்த உலகில் மனிதர்கள் இன்றி பறவைகள் வாழமுடியும். ஆனால், பறவைகள் இன்றி மனிதர்களால் வாழ முடியாது.
-    சலீம் அலி, பறவையியல் பேரறிஞர்.
நீர் இறைப்பதற்காக, கிணற்றுக்குள் வாளியை இறக்கியதும் உள்ளிருந்து ‘விர்ர்..’ என  மேலே வரும் குருவிகள். கிண்ற்றுக்குள் கால் வைத்து இறங்குவதற்கு வசதியாக உட்புறச்சுவர்களில் சிறு துளைகள் வரிசையாக 2 அல்லது 3 அடிகளுக்கு இடைவெளிகளில் அமைந்திருக்கும். இந்த சிறு சிறு  துளைகள் தான்...

9 பிப்., 2014

அன்பின் வழியது உயிர்நிலை...


410 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் மழை பெய்தது. அதுவே பூமியின் முதல் மழை. பூமியில் அப்போது எந்த உயிரினமும் இல்லை. அந்த மழைதான் பூமியில் பெருங்கடல்களை உற்பத்தி செய்தது. அந்த பெருங்கடலில்தான் பூமியின் முதல் உயிரிகள் தோன்றின.
                                                                                                                                 - . செந்தமிழன்

உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் பல்வேறு உயிரினங்கள் இப்பூவுலகில் பிறந்தன. ஒவ்வொரு உயிர்களும் தத்தம் வாழ்வினை மிக அழகாக வாழ்ந்து வருகின்றன. மனிதர்களின் வாழ்வை போல் எந்தவித எதிர்பார்ப்பையும் கொண்டில்லாமல் சுதந்திரமாக தங்களது வாழ்வை கொண்டுள்ளன. மனிதனுக்கு மட்டும் தான் இவ்வுலகம் என்ற கொள்கையோடு தற்போதைய மனிதச்சமூகம் வளர்ந்துவருகிறது. எவ்வளவு இடத்தை தங்களது பெயரில் பதிவு செய்து கொண்டு, அதற்குள் வேறு எவரையும் நுழையவிடாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அனைவரும் நன்கறிவோம்.