மனிதன் தான் வாழும் காலத்தில் காணமுடியாத இரு இடங்கள் இப்புவியில் உள்ளது. ஒன்று தான் கருவாக முதலில் உருவாகி உயிர்வாழ்ந்த தாயின் கருவறை. மற்றொன்று தான் இறந்த பிறகு, தனக்காக உருவாக்கப்படும் கல்லறை. இந்த இரு இடங்களும் நம் வாழ்வின் மிக முக்கியமான இடங்கள். தாயின் கருவறை வரலாற்றை உருவாக்கும் ஒருவரைச் சுமக்கும் இடமாக இருந்தால், கல்லறை வாழ்ந்த ஒருவரின் வரலாற்று நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் இடமாக இருக்கிறது. வரலாற்றில் மன்னர்கள், படைத்தளபதிகள், இனக்குழுத் தலைவர்கள், ஆன்மீகவாதிகள், போன்றோர்களுக்கு மட்டுமே கல்லறைகள் அமைக்கப்பட்டு வந்துள்ளது.
31 மே, 2014
26 ஏப்., 2014
மழை பெய்ய மரங்கள் தேவையா ?...
மழை பெய்ய மரங்கள் தேவையா ? என்ற கேள்வி தான் மனதில் எழும்பியது, ம.செந்தமிழனின் “ முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லை ” என்ற நூலின் தலைப்பைப் பார்த்தவுடன். முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை வாசித்த பின்பு தான் மழை பெய்ய மரங்கள் தேவை இல்லை ‘மனங்களே’ தேவை என்பதை உணர முடிந்தது.
“
நமக்கு
இருக்கும்
ஆற்றலைவிட
நமக்கு
மேலே
மிகப்பெரிய
ஆற்றல்
உள்ளது
என்பது
அனைவரது
கருத்து.
ஆனால்,
அது
இயற்கையின்
பேராற்றல்.
அதற்கு
உருவங்களும், வடிவங்களும்
இல்லை.
ஆனால்,
அதுவே
அனைத்து
உருவங்களாகவும்,
வடிவங்களாகவும்
உள்ளது.
“
மனதால் இதை புரிந்து கொள்வது மிக எளிது. ஆனால்....!
20 ஏப்., 2014
அழகிய மழைக்கிராமம் பள்ளத்துக்காடு...
நகர வாழ்வின் மின்னல் ஓட்டங்களில் இருந்து ஒரு மாறுதலை மனம் நீண்ட நாளாகத் தேடிக் கொண்டிருந்தது. இதைப்பற்றி நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொண்டதும் உண்டு. அவர்களுக்குள்ளும் இதே போன்ற ஒரு உணர்வு துள்ளிக்கொண்டே இருந்துள்ளது. தம்பி மதுமலரன் ஒருநாள் தனது ஊருக்கு அருகேயுள்ள மலைக்குச் செல்லலாம் என பரிந்துரைத்தார். நானும் சரி என்று ஒரு ஞாயிறன்று மலைக்குச் செல்லலாம் என்றேன். ஞாயிறு வந்ததும் காலையில் மலைப்பயணம் நகரத்திலிருந்து வெளியேறி மலையை நோக்கி புறப்பட்டது.
நஞ்சில்லா உணவை தரும் உழவர்களைத் தேடி...
அதென்ன ? நஞ்சில்லா உணவு. அப்ப நஞ்சு உள்ள உணவு வேற இருக்கா ? இந்த கேள்விகள் தான் எனக்குள்ளும் எழுந்தது. நஞ்சுள்ள உணவு என்பது வேறேதும் இல்லை, இன்று நாம் அதிகம்பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவு தான் நஞ்சு உணவு.
அட, நம்மூர்ள தினமும் ஒரு ஏழையோடோ உணவில் கூட பல கூட்டுகள சேர்த்து திங்கிற பாக்கியம் இருக்குனா, கொஞ்சம் வசதியான ஆட்களோட சாப்பாட்டுல எவ்வளவு கூட்டுக இருக்கும். கூட்டுனா என்னாவா?...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


