20 மார்., 2016

முத்துப்பட்டி பெருமாள்மலையும் சமணமும்

மதுரைக்கு அருகே உள்ள மலை ஒன்றில் 2000 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள கல்வெட்டுகள் உள்ளன பார்க்க வருகிறாயா ? என மைத்துனரிடம் இருந்து அழைப்பு வந்துது. 2000 வருட பழமை என்றால் நிச்சயம் மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வை தாங்கி இருக்கும் என்பதால், சரி என்றேன். எப்போது பார்க்க செல்கிறோம் என்றேன். நாளை காலை 5 மணிக்கெல்லாம் தயாராக பேருந்து நிலையம் வந்துவிடு என்றார். 

மறுநாள் காலை 5 மணிக்கெல்லாம் தயாராக பேருந்து நிலையம் வந்தடைந்தேன். மழை லேசாக பெய்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மைத்துனரும் அவரது இரு நண்பர்களும் இருசக்கர வாகனங்களில் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களோடு பயணத்தில் நானும் ஐக்கியமானேன். வழியெங்கும் மழைச்சாரல் அடித்துக் கொண்டே இருந்தது.

2 அக்., 2015

குன்னத்தூரும் சுப்பிரமணியர் மலை கல்வெட்டும்...

மதுரை - சிவகங்கை சாலையில் அமைந்துள்ளது வரிச்சியூர் எனும் சிற்றூர். வரிச்சியூரிலிருந்து வலது புறமாக செல்லும் சாலை .குன்னத்தூர் நோக்கிச் செல்கிறதுஇச்சாலையில் சுமார் 1 கி.மீ தொலைவில் சாலையின் வலதுபக்கம் உதயகிரி எனப்படும்சுப்பரமணியர் மலைஅமைந்துள்ளது. சுப்பரமணியர் மலையின் கிழக்கு திசையில் உதயகிரீஸ்வரர் எனும் குடைவரைக் கோயிலும் குன்றின் பின்புறம் அஸ்தகீரிஸ்வரர் எனும் குடைவரை கோயிலும் அமைந்துள்ளதுஇம்மலைக்கு சென்ற வாரம் நண்பர்களளோடு சென்று வந்தேன்.

குன்னத்தூரும் குடைவரை கோயில்களும்...

மதுரையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் சிவகங்கைச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வரிச்சியூர் எனும் சிற்றூர். அங்கிருந்து ம.குன்னத்தூர் நோக்கிச் செல்லும் சாலையில் உதயகிரி என்னும் சிறுகுன்று உள்ளது. இக்குன்றின் கிழக்குதிசையில் உதயகிரீஸ்வர் என்னும் குடைவரை கோயிலும் குன்றின் பின்புறம் மேற்குதிசையில் அஸ்தகிரீஸ்வர் என்னும் குடைவரை கோவிலும் அமைந்துள்ளது. குன்றின் வடக்கு திசையில் மிகப்பெரிய இயற்கையான முறையில் அமைந்த குகையில் தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் மற்றும் கற்படுக்கைகள் அமைந்துள்ளன. எண்ணளவு குறித்த கல்வெட்டு இம்மலை குகைத்தள முகப்பில் காணப்படுவது இக்குன்றின் சிறப்பு.
சென்றவாரம் நண்பர்களோடு இக்குடைவரை கோயிலுக்கு சென்று வந்தேன். பயணம் அதிகாலையில் திருமங்கலம், சுங்குராம்பட்டி, வழியாக பழைய விமானநிலையம் சாலையில் சென்றது. இளஞ்சிவப்பு நிறத்தோடு கதிரவன் முகம் காட்டினான். பறவைகள் உணவிற்கான தங்களின் தேடலைத் துவங்கியிருந்து அவைகளோடு நாங்களும் இணைந்து கொண்டோம். வழியெங்கும் மிதமான பனியும் பறவைகளின் ரீங்காரமும்  நிறைந்திருந்தது. வழியில் கண்ட சில கிராமங்களில் பசுமை நிறைந்து இருப்பதைக் காணமுடிந்தது.

6 செப்., 2015

நீர்நிலைகள் நீரைச் சேமிக்கவே...

கண்மாய்கள் இருந்த பகுதிகளில், ஆறுகள் ஓடியப் பகுதிகளில் எல்லாம் இன்று லாரிகள் நீரைச் சுமந்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. கண்மாய்கள், ஏரிகள், குளங்களெல்லாம் மூடப்பட்டு விலை நிலங்கள், சாலைகள், குடியிருப்புப் பகுதிகள், பெரும் அங்காடிகள், அரசு கட்டிடங்கள் என கான்கீரிட் காடுகளாகவே வளர்ந்து நிற்கின்றன. இத்தனைக்கு மத்தியிலும் நீரைச் சேமிக்க வேண்டும், நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற வாசகங்களின் கூக்குரல் உரக்க... உரக்கச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால், அவையனைத்தும் மனிதமற்ற, மரங்களற்ற வெட்டவெளிப் பகுதிகளில் எதிரொலியாக மட்டுமே ஒலித்துக்கொண்டு உள்ளது.