8 பிப்., 2015

புவியைப் பேணும் வினைஞன்...

இலட்சக்கணக்கான மரங்களை நட்டு 3000க்கும் மேலான பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடையே மரம் வளர்ப்பது மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தியமத்திய அரசின் சுற்றுச்சூழல் செயல்வீரர் விருது பெற்ற திரு. .யோகனாதன் உடனான ஒரு சந்திப்பு.
பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளிவந்த 'கதிர் 2015'  மலருக்காக தோழர் . யோகநாதனை சந்தித்து ஒரு சிறு கலந்துரையாடலை நண்பர் திலீப்குமார் மற்றும் சித்திரவீதிக்காரருடன் சேர்ந்து ஏற்பாடு செய்தேன். கலந்துரையாடலில் தோழரிடம் பல முக்கிய கேள்விகளை முன் வைத்தோம். அவர்களும் மிகச்சிறப்பாக நமக்கு விளக்கம் தந்தார். அந்த கலந்துரையாடலை இங்கு உங்கள் முன் வைப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

15 ஜன., 2015

கதவை மூடு காற்றே வேண்டாம்...

காலை நேரம். கோடைக்கால வெயில் மாதங்களில் ஒன்று. சாலையெங்கும் பனிமூடியது போல வெண்முகில் கூட்டம். விடிந்தும் விடியாது போல இருந்தது. மக்கள் அனைவரும் சாலைகளில் வெள்ளம் போல மாநகர் மற்றும் புறநகர் நோக்கியும் வாகனங்களில் பயணபட்டு கொண்டிருந்தனர். பலரது முகங்களில் மூக்கையும் வாயையும் மூடியவாறும், தலையை மூடியவாறும் கைகுட்டைகள் கட்டப்பட்டிருந்து.

27 ஜூலை, 2014

மாளிகைமேடு எனும் சோழர்களின் மாளிகை...!

உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்பட வேண்டிய சோழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டானது தஞ்சை பெரிய கோவில் (பெருவுடையார் கோவில்). கோவிலின் அமைப்பும் அழகும் மலைக்க வைக்கும் வியப்பை அளித்தது. அப்போதே அவரது மகன் ராஜேந்திர சோழன் கட்டிய சோழிஸ்வரர் கோவிலையும் பார்த்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

சமீபத்தில் கிடைத்த வாய்ப்பில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் சென்று வந்தேன்இராஜேந்திர சோழன் கட்டிய சோழீஸ்வரர் கோவிலின் அழகை பார்த்து முடிப்பதற்கே பல மணி நேரம் எடுத்தது. சோழிஸ்வரர் கோவிலின் அழகை மனது நிறையும் அளவு கண்டு ரசித்தேன்பின் அங்கிருந்தவர்களிடம் அருகில் சுற்றிப்பார்பதற்கு வேறேதும் இடங்கள் இருக்கின்றதா என்று கேட்ட பொழுது மாமன்னன் இராஜேந்திர சோழனது மாளிகைப் பகுதி ஒன்று உள்ளது என்றனர். அந்த மாளிகைப் பகுதியை தேடிச் சென்றேன்.

6 ஜூலை, 2014

‘குடிசெட்லு’ நடுகற்கல்...

குடிசெட்லு’ ஓசூர்பாகலூருக்கு அருகே அமைந்துள்ள சிற்றூர். இவ்வூர் தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் எல்லையில் அமைந்துள்ளது. தெலுங்கில்குடிஎன்றால் கோவில். ‘செட்லு’ என்றால் மரங்கள். இங்கு வாழ்ந்த மூதாதையர்கள் மரங்கள் அடர்ந்த இப்பகுதியில் உள்ள நடுகற்களை வணங்கி வந்திருக்கும் காரணத்தால் இவ்விடம்குடிசெட்லுஎன்ற காரணப்பெயரோடு அழைக்கப்பட்டிருக்கலாம்.

கடந்த ஜூன் மாதம் ஓசூரில் இரண்டு நாள் நடைபெற்றநடுகற்கள்’ (ஹீரோ ஸ்டோன்ஸ்) பற்றிய தேசிய கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கருத்தரங்கில் கலந்துகொள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா என பல மாநிலங்களிலிருந்தும் தொல்லியல் அறிஞர்கள், ஆராய்சியாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் தங்களின் நடுகற்கள் மற்றும் கற்திட்டைகள் பற்றிய தொல்லியல் கண்டுபிடிப்பு, அகழ்வராய்வுச் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டனர்.