மதுரை மாவட்டம் சேடப்பட்டிக்கு அருகில் 4 கிலோ மீட்டர் தொலைவில்
குப்பல்நத்தம் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. திருமங்கலத்திலிருந்து 30 கி..மீ தொலைவில்
அமைந்துள்ளது. இவ்வூருக்கு திருமங்கலம் – தே.கல்லுப்பட்டி சாலையில் ஆலம்பட்டியை அடுத்து
வலது புறமாக சேடப்பட்டிக்கு பிரிந்து செல்லும் சாலை வழியாகவும், மற்றொன்றாக திருமங்கலம் – உசிலம்பட்டி
சாலையில் இருந்து தங்களாச்சேரிக்கு பிரிந்து செல்லும் சாலை வழியாகவும் குப்பல்நத்தம்
செல்லலாம்.
குப்பல்நத்தம் பொய்கை மலையில் தென்பக்கச் சரிவில் தொல்லியல் கல்வெட்டுகளும்,
சமணச் சிற்பங்களாக பார்சுவநாதர், பாகுபலி போன்ற சமணச் சிற்பங்களும் மற்றும் அதன் கீழே
தெளிவற்ற நிலையில் சிதைந்த கல்வெட்டு ஒன்றும் காணப்படுவதாக வரலாற்றுச் செய்தியை படித்துள்ளேன்.
இதனை மதுரை தொல்லியல் வரலாற்று நூல் மூலம் அறிந்தேன். இச்செய்தியைக் கேள்விபட்ட நாள்
முதலே ஒருநாள் குப்பல்நத்தம் செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன். இதனை நண்பர்களிடமும்
கூறியிருந்தேன். நேற்று நண்பகல் கடந்த மாலைப் பொழுதில் நண்பர்கள் இருவருடன் இணைந்து
குப்பல்நத்தம் சென்று வந்தேன்.
