6 ஜன., 2018

தென்காசி காசி விசுவநாதர் கோவில்



சுற்றுலா சென்று சில மாதங்கள் ஆனதும், நகர வெயிலில் தினம் நடைபெறும் காக்க குளியல் மீதான சலிப்பிலும் குற்றாலம் சென்று ஒரு அருவி குளியலை போட்டுவிட்டு வரலாமே! என்ற எண்ணம் சில் மனதில் தோன்றி வந்தது. குற்றாலத்தில் அருவியில் தண்ணி வருது என்ற செய்தி கேட்டதும், சென்ற வாரம் நண்பர்களோடு சேர்ந்து குற்றாலம் சென்று வந்தேன். மார்கழி மாத மிதமான காலைப் பணியில்  மதுரை - செங்கோட்டை பயணிகள் தொடர்வண்டியில் பயணம். பயணத்தில் சென்ற வாரம் பெய்த மழையால் வழியெங்கும் நீர்நிலைகள், பறவைகள், வயல்கள் என எங்கும் பசுமை நிறைந்திருந்தது
.
தென்காசியில் இருந்து குற்றாலம் 5 கி.மீ. அனைவரும் தென்காசி தொடர்வண்டி நிலையத்தில் இறங்கினோம். குற்றாலம் செல்வதற்கு முன் தொன்மையான காசி விசுவநாதர் கோவிலை பார்த்துவிட்டு செல்ல  முடிவு செய்தோம்தொடர்வண்டி நிலையத்தில் இருந்து கோவில் 1கி.மீ தொலைவில் கோவில் அமைந்துள்ளதால் நடந்தே சென்றோம். கோவில் நுழைவாயிலாக ராசகோபுரம் மிக அழகாக காணப்பட்டது.

9 ஜூலை, 2016

உத்தமபாளையம் திருக்குணகிரி சமணப்பள்ளி

உத்தமபாளையம் சமணத்தளத்திற்கு ஒரு நாளாவது சென்று வரவேண்டும் என்ற எண்ணம் பல மாதங்களாக மனதில் இருந்து வந்தது. பயணங்கள் சென்றும் பல மாதங்கள் ஆகிவிட்டதன் காரணமாக ஒரு சின்ன சலிப்பு. அதை ஈடுகட்ட இம்முறை மேற்குதொடர்ச்சி மலைகளை ஒட்டிய சின்னமனூர், உத்தமபாளையம், கூடலூர் பகுதிகளுக்கு நண்பர்களோடு பயணம் சென்று வந்தேன்
உத்தமபாளையத்திலிருந்து கம்பம் செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ  தொலைவில் அமைந்துள்ளது சமணர்மலை. இம்மலையில்தான் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணபள்ளி அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் இம்மலையை மொட்டமலை, சமணர்மலை, கருப்பணசாமி மலை என்றே அழைக்கின்றனர். இங்கு செல்வதற்கு கருப்பணசாமி கோவில் எங்கு உள்ளது என்று கேட்டால்தான் எளிதாக வழி சொல்கின்றனர் இங்கு வசிக்கும்  மக்கள்.

5 ஏப்., 2016

தேவன்குறிச்சியில் பாண்டியர் காலக் கல்வெட்டுகள்

திருமங்கலத்திற்கு அருகிலுள்ள தே.கல்லுப்பட்டி – பேரையூர் சாலையில் உள்ளது தேவன்குறிச்சி சிற்றூர். இங்குள்ள மலைக்கு அருகில் உள்ள அக்னீஸ்வரர் - கோமதியம்மன் கோவிலில் கி.பி 12ம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்க் கல்வெட்டுகள் சில உள்ளன. இதில் இக்கோவிலுக்கு மானியங்கள் வழங்கப்பட்டதை விவரிக்கும் கல்வெட்டுகள் சில கோவிலின் கருவறைச் தென்புறச் சுவரிலும், கோவிலைச் சுற்றியுள்ள கோட்டைச் சுவர்களிலும் காணப்படுகின்றன. அவைகள் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216-1238 ) காலத்தை சேர்ந்தவை.

6000 ஆண்டுகள் பழமையான தேவன்குறிச்சி

தேவன்குறிச்சி என்னும் சிற்றூர் திருமங்கலத்திலிருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் T.கல்லுப்பட்டி - பேரையூர் சாலையில் அமைந்துள்ளது. கல்லுப்பட்டியிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தேவன்குறிச்சி. T.கல்லுப்பட்டி என்ற ஊர் பெயரில் முன்னதாக வரும் T. (தே) என்ற எழுத்து தேவன்குறிச்சியைக் குறிக்கும் (T Stands for Thevankuruchi. Kalluppadti). தேவன்குறிச்சி பற்றிய வரலாற்றுச் செய்திகளை இணையதளம் மூலமாக  படித்து அறிந்துக்கொண்ட பின் அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம்  அதிகமானது. 
நண்பர்களுடன் தேவன்குறிச்சிக்கு சென்ற வாரம் சென்று வந்தேன். காலை வேளையில் சென்றால் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் என்பதால் 6 மணியளவில் இருசக்கர வாகனங்களில் புறப்பட்டோம். கடந்த இரண்டு வாரங்களாக நல்ல மழை. வழியெங்கும் குளுமையும் பசுமையும் நிறைந்திருந்தது. சிறு குளங்களிலெல்லாம் நீர் நிறைந்து காணபட்டது. குளங்களில் சாம்பல் நாரை, நத்தைகொத்தி, வெண் கொக்கு, மீன்கொத்தி, பனங்காடை, கரிச்சான்குருவி என பறவைகள் நிறைந்திருந்தன. 

20 மார்., 2016

முத்துப்பட்டி பெருமாள்மலையும் சமணமும்

மதுரைக்கு அருகே உள்ள மலை ஒன்றில் 2000 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள கல்வெட்டுகள் உள்ளன பார்க்க வருகிறாயா ? என மைத்துனரிடம் இருந்து அழைப்பு வந்துது. 2000 வருட பழமை என்றால் நிச்சயம் மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வை தாங்கி இருக்கும் என்பதால், சரி என்றேன். எப்போது பார்க்க செல்கிறோம் என்றேன். நாளை காலை 5 மணிக்கெல்லாம் தயாராக பேருந்து நிலையம் வந்துவிடு என்றார். 

மறுநாள் காலை 5 மணிக்கெல்லாம் தயாராக பேருந்து நிலையம் வந்தடைந்தேன். மழை லேசாக பெய்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மைத்துனரும் அவரது இரு நண்பர்களும் இருசக்கர வாகனங்களில் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களோடு பயணத்தில் நானும் ஐக்கியமானேன். வழியெங்கும் மழைச்சாரல் அடித்துக் கொண்டே இருந்தது.

2 அக்., 2015

குன்னத்தூரும் சுப்பிரமணியர் மலை கல்வெட்டும்...

மதுரை - சிவகங்கை சாலையில் அமைந்துள்ளது வரிச்சியூர் எனும் சிற்றூர். வரிச்சியூரிலிருந்து வலது புறமாக செல்லும் சாலை .குன்னத்தூர் நோக்கிச் செல்கிறதுஇச்சாலையில் சுமார் 1 கி.மீ தொலைவில் சாலையின் வலதுபக்கம் உதயகிரி எனப்படும்சுப்பரமணியர் மலைஅமைந்துள்ளது. சுப்பரமணியர் மலையின் கிழக்கு திசையில் உதயகிரீஸ்வரர் எனும் குடைவரைக் கோயிலும் குன்றின் பின்புறம் அஸ்தகீரிஸ்வரர் எனும் குடைவரை கோயிலும் அமைந்துள்ளதுஇம்மலைக்கு சென்ற வாரம் நண்பர்களளோடு சென்று வந்தேன்.

குன்னத்தூரும் குடைவரை கோயில்களும்...

மதுரையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் சிவகங்கைச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வரிச்சியூர் எனும் சிற்றூர். அங்கிருந்து ம.குன்னத்தூர் நோக்கிச் செல்லும் சாலையில் உதயகிரி என்னும் சிறுகுன்று உள்ளது. இக்குன்றின் கிழக்குதிசையில் உதயகிரீஸ்வர் என்னும் குடைவரை கோயிலும் குன்றின் பின்புறம் மேற்குதிசையில் அஸ்தகிரீஸ்வர் என்னும் குடைவரை கோவிலும் அமைந்துள்ளது. குன்றின் வடக்கு திசையில் மிகப்பெரிய இயற்கையான முறையில் அமைந்த குகையில் தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் மற்றும் கற்படுக்கைகள் அமைந்துள்ளன. எண்ணளவு குறித்த கல்வெட்டு இம்மலை குகைத்தள முகப்பில் காணப்படுவது இக்குன்றின் சிறப்பு.
சென்றவாரம் நண்பர்களோடு இக்குடைவரை கோயிலுக்கு சென்று வந்தேன். பயணம் அதிகாலையில் திருமங்கலம், சுங்குராம்பட்டி, வழியாக பழைய விமானநிலையம் சாலையில் சென்றது. இளஞ்சிவப்பு நிறத்தோடு கதிரவன் முகம் காட்டினான். பறவைகள் உணவிற்கான தங்களின் தேடலைத் துவங்கியிருந்து அவைகளோடு நாங்களும் இணைந்து கொண்டோம். வழியெங்கும் மிதமான பனியும் பறவைகளின் ரீங்காரமும்  நிறைந்திருந்தது. வழியில் கண்ட சில கிராமங்களில் பசுமை நிறைந்து இருப்பதைக் காணமுடிந்தது.

6 செப்., 2015

நீர்நிலைகள் நீரைச் சேமிக்கவே...

கண்மாய்கள் இருந்த பகுதிகளில், ஆறுகள் ஓடியப் பகுதிகளில் எல்லாம் இன்று லாரிகள் நீரைச் சுமந்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. கண்மாய்கள், ஏரிகள், குளங்களெல்லாம் மூடப்பட்டு விலை நிலங்கள், சாலைகள், குடியிருப்புப் பகுதிகள், பெரும் அங்காடிகள், அரசு கட்டிடங்கள் என கான்கீரிட் காடுகளாகவே வளர்ந்து நிற்கின்றன. இத்தனைக்கு மத்தியிலும் நீரைச் சேமிக்க வேண்டும், நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற வாசகங்களின் கூக்குரல் உரக்க... உரக்கச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால், அவையனைத்தும் மனிதமற்ற, மரங்களற்ற வெட்டவெளிப் பகுதிகளில் எதிரொலியாக மட்டுமே ஒலித்துக்கொண்டு உள்ளது.

25 ஜூலை, 2015

பராங்குசப் பேரேரியும் ஏழு கண் மடையும்...

இராசபாளையத்தில் ஜூலை 18,19களில் தமிழக தொல்லியல் கழகத்தின் 25ம் ஆண்டுக் கருத்தரங்கு மற்றும் 26வது ’ஆவணம்’ இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவை மதுரையில் செயல்பட்டு வரும் ‘பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்’ ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. கருத்தரங்கில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலம் மற்றும் இலங்கையிலிருந்தும் தொல்லியல் அறிஞர்கள், ஆராய்சியாளர்கள் வந்திருந்தனர். அவர்களுடைய தொல்லியல் கண்டுபிடிப்பு, அகழ்வராய்வுச் செய்திகள், நிழற்ப்படங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

19 ஜூலை, 2015

குத்தால அருவியிலே குளித்தது போல் இருக்குதா...

சரியாக சூன், சூலை மாதங்களில் குற்றால சீசன் தொடங்கிவிடும். ஆகஸ்ட் மாதம் வரை சீசன் குறையாது. தற்போது பருவகால மாற்றங்கள், மழை பெய்யா எனக் குற்றாலத்தில் நீர் வருவதை காண மக்கள் எந்நேரமும் காத்துகிடக்க வேண்டியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மழை பெய்துவிட்டால் குற்றாலத்தைச் சுற்றி உள்ளவர்களுக்கு கொண்டாட்டந்தான். அவர்களுக்குத்தான் முதலில் செய்தி கிடைக்கும் என்பதால் குற்றாலக் குளியல் அவர்களுக்குத்தான் முதல்வசம். பின் அங்கிருந்து செய்தி பரவி வெளியூர் மக்களுக்குச் சென்றடையும்.

28 ஜூன், 2015

திருப்பரங்குன்றம் அமன்பாழி கற்படுகைகள்...

சென்ற வாரம் காலையில் திருப்பரங்குன்றம் வரை நானும் நண்பரும் சென்றிருந்தோம். திருப்பரங்குன்றம் மதுரையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் மதுரை – திருமங்கலம் சாலையில் அமைந்துள்ளது. மலையின் மேற்குப் பகுதியில் தொடர்வண்டி நிலையத்திற்கு எதிரில் மலையில் இயற்கையாக அமைந்த குகைத்த தளம், சமணத்துறவிகள் தங்குவதற்கு வெட்டப்பட்ட கற்படுக்கைகள், தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் என பல வரலாற்றுத் தகவல்களை இம்மலை தன்னகத்தே கொண்டுள்ளது. திருப்பரங்குன்ற மலையைச் சுற்றி வரும் வழியில் தென்பரங்குன்றத்தில் குடைவரைக்கோயில் ஒன்றுள்ளது. இவை அனைத்தையும் கண்டுவர வேண்டும் எனச் சென்றிருந்தோம். தொன்மையான வரலாற்றுச் செய்திகளைக் காண பயணத்தோம்.

தென்பரங்குன்றம் குடைவரைக் கோயில்.

திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி செல்லும் சாலையில், சாலையின் இடது புறத்தில் குடைவரைக்கு செல்லும் வழிக் காணப்பட்டது. குடைவரைக்குச் செல்லும் வழியில் பூங்கா ஒன்று  அழகாக காணப்பட்டது. நாங்கள் சென்ற நேரம் பூங்காவில் ஆங்காங்கே காதலர்கள் அமர்ந்திருந்தனர். மலையில் குடைவரைச் சற்று உயரத்தில் காணப்பட்டது. மேலே செல்வதற்கு வசதியாக படிகள் செய்து தரப்பட்டிருந்தது.

14 ஜூன், 2015

குப்பல்நத்தமும் பொய்கைமலை சிற்பங்களும்...

மதுரை மாவட்டம் சேடப்பட்டிக்கு அருகில் 4 கிலோ மீட்டர் தொலைவில் குப்பல்நத்தம் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. திருமங்கலத்திலிருந்து 30 கி..மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு திருமங்கலம் – தே.கல்லுப்பட்டி சாலையில் ஆலம்பட்டியை அடுத்து வலது புறமாக சேடப்பட்டிக்கு பிரிந்து செல்லும்  சாலை வழியாகவும், மற்றொன்றாக திருமங்கலம் – உசிலம்பட்டி சாலையில் இருந்து தங்களாச்சேரிக்கு பிரிந்து செல்லும் சாலை வழியாகவும் குப்பல்நத்தம் செல்லலாம்.
குப்பல்நத்தம் பொய்கை மலையில் தென்பக்கச் சரிவில் தொல்லியல் கல்வெட்டுகளும், சமணச் சிற்பங்களாக பார்சுவநாதர், பாகுபலி போன்ற சமணச் சிற்பங்களும் மற்றும் அதன் கீழே தெளிவற்ற நிலையில் சிதைந்த கல்வெட்டு ஒன்றும் காணப்படுவதாக வரலாற்றுச் செய்தியை படித்துள்ளேன். இதனை மதுரை தொல்லியல் வரலாற்று நூல் மூலம் அறிந்தேன். இச்செய்தியைக் கேள்விபட்ட நாள் முதலே ஒருநாள் குப்பல்நத்தம் செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன். இதனை நண்பர்களிடமும் கூறியிருந்தேன். நேற்று நண்பகல் கடந்த மாலைப் பொழுதில் நண்பர்கள் இருவருடன் இணைந்து குப்பல்நத்தம் சென்று வந்தேன்.

2 மே, 2015

வரலாறு கூறும் தாண்டிக்குடி கற்பதுக்கை...

சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகெங்கிலும் இறந்தவர்களின் நினைவாக பல நினைவுச் சின்னங்கள் எழுப்பும் வழக்கம் இருந்துவந்துள்ளது. ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு பெயர்கள். கற்பதுக்கைகள், கற்திட்டைகள், நடுகற்கள், என பல்வேறு வடிவங்களையும், பெயர்களையும் கொண்டுள்ளன.
அவற்றில் கற்பதுக்கை (CIST BURIAL) என்பது பெருங்கற்காலத்தில் இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுச்சின்ன வகைகளுள் ஒன்று. இது இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்களை வைக்க நிலத்திற்கு கிழே கல்லால் அமைக்கப்பட்ட சிறிய அறை போன்ற அமைப்பு. கற்பதுக்கைகள் பலகை போன்ற வடிவம் கொண்ட கற்களால் ஆனவைகள்.

தாண்டிக்குடி மலைப் பயணம் - பகுதி 2

5 மணிக்கு தாண்டிக்குடி தமிழ்நாடு காப்பி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான காப்பி தோட்டம் அமைந்துள்ள காடுக்களுக்குள்ளே உள்ளகற்பதுக்கைஒன்றைக் காண பசுமைநடைக் குழுவினர் அனைவரும் சுமார்கி.மீ காட்டிற்குள் நடை பயணமாகச் சென்றோம். வழியெங்கும் உயர்ந்த மரங்களின் கீழே காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. கற்ப்பதுக்கை அமைந்துள்ள இடம் முழுவதும் காட்டுச் செடிகள் வளர்ந்து இருந்தது. கற்ப்பதுக்கையின் வரலாற்றுச் சிறப்பை தாண்டிக்குடியைச் சார்ந்த விவசாயி மோகனசுந்தரம் பசுமைநடைக் குழுவினரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

தாண்டிக்குடி மலைப் பயணம் - பகுதி 1

மலைகளுக்கும் எனக்குமான நெருக்கத்தில் மலைப் பயணங்கள் ஒவ்வொன்றும் ஒருபுதுவிதபுத்துணர்ச்சியையும், அனுபவங்களையும் தந்து கொண்டிருருகின்றன. இயற்கையின் படைப்புகளில் ஒன்றான மலைகளின் அழகை வெறும் வார்த்தைகளால் மட்டுமே வர்ணித்துவிட இயலாது. அதனை உள்ளார்ந்து ரசிப்பதே உன்னதம்.
இந்த ஆண்டுக்கான கோடைக்கால விடுமுறைப் பயணமாக திண்டுக்கல் மாவட்டதில் உள்ள தாண்டிக்குடி மலைப் பகுதிக்கு இரண்டாவது முறையாக எங்களது பசுமைநடைக் குழுவோடு இரண்டு நாள் (ஏப்ரல் 25 & 26) பயணமாக சென்று வந்தேன். பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மற்றும் கொடைக்காணல் பகுதிகளில் மட்டும் ஏறத்தாள 5000 கற்ப்பதுக்கைகள், கற்த்திட்டைகள் இருப்பதாக அப்பகுதி விவசாய பெருமக்கள் கூறுகின்றனர்.

7 மார்., 2015

யோகு மரங்களின் உற்ற தோழன்...

பெருகி வரும் நாகரீக வளர்ச்சி சூழலில் கட்டிடங்கள் தான் வளர்ந்து கொண்டே செல்கின்றன. மரங்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றன. விளைவு புவியின் வெப்பநிலை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. மழை பொழிவு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் பெரும்பாண்மையான மரங்கள் வெட்டப்பட்டு அவ்விடங்களில் எல்லாம் கான்கீரிட் கா(வீ)டுகள், மால்கள், சாலைகள், தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளன. மரங்களின் தேவையை மக்கள் உணர்வதற்கு நேரமில்லாத அளவு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது.