24 ஜூன், 2012

கலைகளைப் போற்றுவோம்...

”  அழிந்த கலைகளை மீட்பதும்,

    நலிந்த கலைஞர்களை காப்பதும் நமது கடமை..  ”

தமிழில் கலை என்பதற்கு கற்றற்கு உரியவை எல்லாம் கலை என்ற பொது வரையறை தரப்படுகிறது. எனினும் உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்ந்த ஓவியம் முதலியவற்றை மட்டுமே கலை என்று சிறப்பித்து வழங்குதல் பொருந்தும் என்னும் தமிழ் அறிஞர் மு.வரதராசனாரின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. பொது வழக்கிலும் மு. வரதராசனாரின் கூற்றுக்கமையவே கலை என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது அந்த வழக்கம் பழைய கற்றலுக்கு உரியவை எல்லாம் கலை என்ற பொருளிலும் எடுத்தாளப்படுகின்றது.

6 ஜூன், 2012

நினைவைவிட்டு நீங்காத பள்ளி நாட்கள்...

காலை எட்டு மணிக்குத் தெருவின் அனைத்து வீடுகளிலும் எப்பவும் இல்லாத அளவு ஒரு வேகம். ஒருமாத விடுமுறைக்கு பின் பள்ளி என்றால் அப்படித்தானே இருக்கும். சில குழந்தைகள் தயாரவதில் தாமதமும், அவர்களின் பெற்றோர் அதட்டல்களும் என ஏக களேபரமாகவே இருந்தது. பள்ளிக்கு செல்ல குழந்தைகளிடம் உள்ள அவசரத்தை விட அவர்களை அனுப்புவதில் பெற்றோர்களின் அவசரமே அதிகமாக தெரிந்தது.