1 ஜூன், 2014

சுற்றுப்புறச்சூழல் பாதுக்காப்பு நம் கைகளில்...

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய சமூகத்தில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான அவசியமான ஒன்று. ஆனால், அதைப் பற்றிய விழிப்புணர்வே நம்மில் பலரிடம் இல்லை. இன்னும் பலருக்கும் இன்றுதான் (ஜூன் 5) உலக சுற்றுச்சூழல் தினம் என்பதே தெரியாது. சுற்றுபுறச்சூழலை ஏன் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவதில்லை. மேலும் நம்மைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் இவ்வாறுதான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதும் தெரிவதில்லை. இதன் விளைவு... சுற்றுச்சூழலை பற்றிய அவசியத்தை அனைவரும் அறிந்துகொள்ளஐக்கிய நாடுகள் அமைப்புஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதியை ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வாக கடைபிடித்து வருகிறது.