29 ஜூன், 2013

கருங்காலக்குடியும் கற்கால பாறை ஓவியங்களும்...

மேலூரிலிருந்து திருச்சி செல்லும் நான்கு வழிசாலையின் வலதுபுறம் கருங்காலக்குடி என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. கருங்காலக்குடிச் சிற்றூரின் கிழக்கு திசையில் அமைந்துள்ளது பஞ்ச பாண்டவர் மலை (அ) குன்று. இம்மலையில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டும் கற்படுக்கைகளும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமண முனிவரின் சிற்பமும், வட்டெழுத்துக் கல்வெட்டும் காணப்படுகின்றன. 

இயற்கையாகவே பஞ்ச பாண்டவர் மலையின் கீழ்பகுதி குகை போன்று அமைப் காணப்படுகின்றது. குகையின் கீழ்த் தளத்தில் சுமார் 30 கற்படுகைகள் வெட்டப்பட்டுள்ளன. குகையின் முகப்பில் நீர்வடி விளிம்பு வெட்டப்பட்டு அதன்கீழ் தமிழ்பிராமிக் கல்வெட்டு ஒன்று வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.மு 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. குகைத் தளத்திற்கு அருகிலுள்ள குன்றில் சமண முனிவரின் சிற்பமும் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்றும் செதுக்கப்பட்டுள்ளது. இக்குகைத் தளத்தின் மேல்புறம் அமைந்துள்ள மலைப் பாறையில் ஓவியங்கள் காணப்படுகின்றன. ஓவியங்களைக் காண ....

கருங்காலக்குடியும் தமிழ் பிராமி கல்வெட்டுகளும்...

கதிரவனே துயில் கலையாத காலை பொழுது. பேருந்தில் பயணம். பேருந்தின் அனைத்து சன்னல்களும் அடைத்தே காணப்பட்டது. மதுரை மாட்டுதாவணிக்கு பயணசீட்டை எடுத்துக் கொண்டு முன் இருக்கையில் அமர்ந்தேன். வெளியே சாலையோர தேநீர் கடைகளில் பக்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கையில் மெல்ல நகர்ந்தது பேருந்து. மதுரைக்கான சுற்றுசாலை வழியாக பயணம் தொடர்ந்தது. பயணங்களில் அதிகாலை பயணத்தில் மட்டும்தான் அமைதியைக் காணமுடிகிறது. மாட்டுத்தாவணியை நெருங்கிக் கொண்டிருக்கையில் கதிரவனின் துயில் மெல்ல கலைந்தது. மேகங்கள் சூழ்ந்த வானம் அழகாக காட்சி தந்தது. சில நிமிடங்களில் பேருந்து நிலையம் வந்தது. பேருந்து நிலையத்தின் எதிரேயுள்ள இடத்திலிருந்து தான் இன்றைய பசுமை நடை பயணம் ஆரம்பம்.

16 ஜூன், 2013

திண்டுக்கல் சிற்பக் கோட்டை...

மதுரையிலிருந்து திண்டுக்கல் வழியாக சேலம் பயணம் செய்யும் போதெல்லாம், எப்படியாது ஒரு முறையாவது திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மலைக்கோட்டைகளை பார்த்துவிட வேண்டும் என ஆவல் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்தது. இப்படித்தான், நமக்கு அருகில் இருக்கும் பல முக்கிய இடங்களை பார்க்காமலேயே சென்று விடுகிறோம். கடந்த வாரம் நண்பர் ஒருவரின் திருமணம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி திருமணத்தில் கலந்து கொண்டு மதிய உணவை முடித்தவுடன் நண்பர்களோடு சென்று மலைக்கோட்டையை பார்த்து வந்தேன்.

மலைக்கோட்டையை பார்த்த பிறகு, மதுரைக்கு அருகில் இருக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை இத்தனை நாள் பார்க்காமல் இருந்து இருக்கிறோமே என்ற உணர்வுதான் ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி இதர விடுமுறை நாள்களில் பல தொலைதூர சுற்றுலாத் தளங்களுக்கு செல்லும் நாம்... நமக்கு அருகில் இருக்கும் முக்கிய இடங்களை காணாமல் இருப்பது தான், அருகிலேயே உள்ள ஊர்களின் மேல் நாம் கொண்டுள்ள பற்று.