7 மார்., 2015

யோகு மரங்களின் உற்ற தோழன்...

பெருகி வரும் நாகரீக வளர்ச்சி சூழலில் கட்டிடங்கள் தான் வளர்ந்து கொண்டே செல்கின்றன. மரங்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றன. விளைவு புவியின் வெப்பநிலை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. மழை பொழிவு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் பெரும்பாண்மையான மரங்கள் வெட்டப்பட்டு அவ்விடங்களில் எல்லாம் கான்கீரிட் கா(வீ)டுகள், மால்கள், சாலைகள், தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளன. மரங்களின் தேவையை மக்கள் உணர்வதற்கு நேரமில்லாத அளவு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது.