30 நவ., 2013

வைகையில் கரையேறிய திருவேடகம்...

திருவேடகம் என்றாலே தென்னை மரங்கள் தான் நினைவில் நிற்கின்றன. வைகை ஆற்றங்கரையில் தென்னை, வாழை, வெற்றிலை, நெல் என விவசாய நிலங்கள் சூல இயற்கையின் மடியில் திருவேடகம் சிற்றூர் அமைந்துள்ளது. வைகையின் ஆற்றுப் பாசனத்தால் இப்பகுதியை எங்கு நோக்கிலும் செழிமை நிறைந்து காணபடுகிறது. திருவேடகம் ஏடகநாதர் கோயில் மற்றும் வைகையின் சிறப்பை அறிந்துகொள்ளவும் பசுமை நடை குழுவினரோடு ஞாயிறு அதிகாலை எங்கள் ஊர் நண்பர்களுடன் சேர்ந்து சென்று வந்தேன்.  மேலக்காலை அடுத்த வைகை ஆற்றங்கரையில் ஓங்கி வளர்ந்து நின்றிருந்தது தென்னை மரங்கள். கார்த்திகை மாத அதிகாலை மூடுபனியில் கதிரவன் மெல்ல வானில் வந்தான். இளமஞ்சள் நிற வானில் ஓவியமாய் தென்னை மரங்கள் அசைந்து கொண்டிருந்தன.

27 அக்., 2013

கொங்கர் புளியங்குளம் பஞ்ச பாண்டவர் மலை...


மலைகளைக் காண்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் மலைகளை கண்டு வருவது வாடிக்கையாக இருந்தது. மதுரை மாநகரும் நான்கு பக்கமும் மலைகள் சூழ அமைந்துள்ள பெரும் வரலாற்று புகழ் வாய்ந்த பகுதி. இம்முறை மதுரையிலிருந்து தேனி - கம்பம் செல்லும் நெடுஞ்சாலையில் செக்காணூரணிக்கு அருகேயுள்ள கொங்கர் புளியங்குளத்திற்கு சென்று வந்தேன். காரணம் இம்மலையில் 2000 வருடங்கள் பழமையான தமிழிக் கல்வெட்டுகள் இருப்பது என்பதே. விடுமுறை நாளான ஞாயிறு காலை பொழுது ஒன்றில் நண்பர்களோடு சென்றேன்.

26 அக்., 2013

மனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்...

மதுரையில் நண்பர் ஒருவரின் திருமண விழாவிற்க்காக நானும் நண்பரும் சென்றிருந்தோம். மண்டபத்தின் வாயிலில் மணமக்களின் பெயர்கள்கள் அழகாக வடிவமைக்கபட்டிருந்தது. உள்ளே நுழைந்ததும் பெண்கள் கூட்டம் நம்மை சிரித்த முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தது. சிரித்துக் கொண்டே நகர மனமில்லாமல் நகர்ந்தோம். அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த மேடை அரங்கில் மணமகனும், மணப்பெண்ணும் நின்றிருத்தனர்.
உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வரிசையாக மணமக்களுக்கு பரிசுகளை வழங்கியவாறு நிழற்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். நாங்களும் இந்த சம்பிரதாயங்களை வரிசையில் நின்று முடித்துக் கொண்டு சாப்பாடு நடக்குமிடம் நோக்கிச் சென்றோம். கனிவான உணவு பரிமாறல்களுடன் அருமையான அறுசுவை உணவால் வயிறு நிறைந்தது. பால் பாயசத்தின் இனிப்பு நாவினில் கரையாமல் இருந்தது. சாப்பாடு அறையை விட்டு வெளியேறி அரங்கினுள் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். அப்பொழுதான் அந்த காட்சியை காண முடிந்தது. அனைவரது கைகளிலும்,

24 செப்., 2013

திருவாதவூர் ஓவா மலையும் ஓயாத மனமும்...

மதுரைமாட்டுத்தாவணி என்ற பெயர்ப் பலகையோடு பேருந்து நின்று கொண்டிருந்தது. அதிகாலை நேரமென்பதால் கூட்டம் ஒன்றும் இல்லை. காற்று கிடைக்கும் என்பதால், படியை ஒட்டிய இருக்கையில் ஒற்றையாளாய் ஒட்டிக் கொண்டேன். பேருந்து மெல்ல நகர்ந்தது. பயணம் துவங்கிய சில வினாடிகளில் நகர எல்லையைவிட்டு புறநகர் சுற்றுச்சாலையில் பேருந்து பாய்ந்து கொண்டிருந்தது, வேங்கையை போல. வெளியே செந்நிறத்தோடு காட்சி தந்துகொண்டிருந்தது அதிகாலை ஆகாயம். நாசி வழியாக ஈரப்பதம் நிறைந்த மெல்லிய காற்று மூச்சுக் குழலுக்குள் மென்மையாக சென்று கொண்டிருந்தது. முகமெல்லாம் சில்லென்று ஆகியது. நகர வாழ்க்கையில் வெயில்பட்டு வறண்ட முகத்தையும் தேகத்தையும் சில் காற்று முழுமையாய் அப்பிக் கொண்டிருந்தது.

9 ஆக., 2013

மரங்களில்தான் விளம்பரம் செய்யணுமா ?...

வெயிலின் கொடுமை சாலையில் செல்லும் பொழுது தெரியும். எங்கயாவது ஒதுங்க நிழல் கிடைக்காத என கண்கள் அலைபாயும். அது மரத்தின் நிழலாக இருந்து விட்டால் இன்னும் மகிழ்ச்சியே. கிடைக்கும் மர நிழலில் ஒதுங்கக்கூட இடம் கிடைக்குமா(?) என்பது வேறு விசயம். அந்த அளவிற்க்கு இன்று சாலையோரம் உள்ள மரங்களின் தேவை அதிகரித்துள்ளது. தினசரிக் கடைகள் எல்லாம் கிடைக்கும் அந்த ஓரிரு மரங்களின் கீழ் இடம் பிடித்துவிடுகின்றன. இல்லையென்றால், இருசக்கர வாகனங்களின் தற்காலிக புகலிடமாக மாறியிருக்கும். எங்கு மரமிருந்தாலும் அங்கு இந்த நிலைதான், இன்று திரும்பிய திசையெல்லாம். அந்த அளவிற்க்கு ‘மரங்களின் நிழல்கள்’ இன்று நமக்குத் தேவைப்படுகின்றன. ஆனால், இந்த மரங்களுக்குப் பாதுகாப்பு மட்டும் தரப்படுவதில்லை. ஏன் இந்த முரண்பட்டச் சூழல் நம்மிடையே நிலவுகிறது?

27 ஜூலை, 2013

கழிஞ்சமலை தமிழி கல்வெட்டுகள்...



கழிஞ்சமலைத் தொடரில் பல விதமான பாறைகளின் வித்தியாசமான உருவங்களையும், அவைகளின் புவியியல் அமைப்பையும் கண்டபடியே நடந்து கொண்டிருந்தோம். வழியில் கண்ட சிறுகுன்றின் மீது நிற்கும் ஒரு பாறையின் இந்த காட்சி மீண்டும் மனதைவிட்டு அகலாமல் கல்லாய் நிற்கிறது.

குகைத்தளம் அமைந்துள்ள இடத்திற்கு செல்வதற்கு முன் ஒரு பாறைக்கு அருகே பல மணிகள் இரண்டு கற்தூண்களுக்கு நடுவே கம்பி ஒன்றில் தொங்கவிடப் பட்டிருந்தது. இந்த மணிகள் அனைத்தும் மக்களின் வேண்டுதலாக இருக்க வேண்டும். அருகில் தெய்வங்களின் உருவங்கள், சிலைகள் ஏதும் காணப்படவில்லை. மலைப் பாறையையே தெய்வமாக இப்பகுதி மக்கள் வழிப்பட்டு வருவதாக அருகில் இருந்த சில குடியிருப்பு வாசிகள் கூறினர். இயற்கை சில இடங்களில் தெய்வமாக வழிபடுவதை காணும் பொழுதெல்லாம் மனம் நிறைவு அடைகிறது. கோயில் மணிகளை பார்த்துவிட்டு பின்னர் அருகில் இருந்த குகைத் தளத்திற்கு சென்றோம்.

அரிட்டாபட்டியில் குடைவரை கோயில்...

மதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நரசிங்கம்பட்டி என்னும் சிற்றூர்க்கு மேற்கே அரிட்டாபட்டி எனும் சிற்றூர் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அரிட்டாபட்டி சிற்றூர். இங்கு முற்கால பாண்டியர் காலத்து குடைவரையும், 2000 வருட பழமையான தமிழிக் கல்வெட்டும் உள்ளது. இதனை காண்பதற்காக பசுமைநடைக் குழுவோடு இணைந்து சென்ற வாரம் ஞாயிறு காலை சென்று வந்தேன். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் குழுவினர் சந்திக்கும் இடமாக கூறப்பட்டு இருந்தது. காலை 6.30 மணியளவில் அங்கு சென்றேன். குழுவினர் ஏற்பாடு செய்திருந்த பேருந்தில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் அரிட்டாபட்டி நோக்கிச் சென்றோம். சில நண்பர்கள் தங்களுடைய சிற்றுந்துகளில் எங்களோடு வந்தனர்.

29 ஜூன், 2013

கருங்காலக்குடியும் கற்கால பாறை ஓவியங்களும்...

மேலூரிலிருந்து திருச்சி செல்லும் நான்கு வழிசாலையின் வலதுபுறம் கருங்காலக்குடி என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. கருங்காலக்குடிச் சிற்றூரின் கிழக்கு திசையில் அமைந்துள்ளது பஞ்ச பாண்டவர் மலை (அ) குன்று. இம்மலையில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டும் கற்படுக்கைகளும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமண முனிவரின் சிற்பமும், வட்டெழுத்துக் கல்வெட்டும் காணப்படுகின்றன. 

இயற்கையாகவே பஞ்ச பாண்டவர் மலையின் கீழ்பகுதி குகை போன்று அமைப் காணப்படுகின்றது. குகையின் கீழ்த் தளத்தில் சுமார் 30 கற்படுகைகள் வெட்டப்பட்டுள்ளன. குகையின் முகப்பில் நீர்வடி விளிம்பு வெட்டப்பட்டு அதன்கீழ் தமிழ்பிராமிக் கல்வெட்டு ஒன்று வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.மு 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. குகைத் தளத்திற்கு அருகிலுள்ள குன்றில் சமண முனிவரின் சிற்பமும் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்றும் செதுக்கப்பட்டுள்ளது. இக்குகைத் தளத்தின் மேல்புறம் அமைந்துள்ள மலைப் பாறையில் ஓவியங்கள் காணப்படுகின்றன. ஓவியங்களைக் காண ....

கருங்காலக்குடியும் தமிழ் பிராமி கல்வெட்டுகளும்...

கதிரவனே துயில் கலையாத காலை பொழுது. பேருந்தில் பயணம். பேருந்தின் அனைத்து சன்னல்களும் அடைத்தே காணப்பட்டது. மதுரை மாட்டுதாவணிக்கு பயணசீட்டை எடுத்துக் கொண்டு முன் இருக்கையில் அமர்ந்தேன். வெளியே சாலையோர தேநீர் கடைகளில் பக்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கையில் மெல்ல நகர்ந்தது பேருந்து. மதுரைக்கான சுற்றுசாலை வழியாக பயணம் தொடர்ந்தது. பயணங்களில் அதிகாலை பயணத்தில் மட்டும்தான் அமைதியைக் காணமுடிகிறது. மாட்டுத்தாவணியை நெருங்கிக் கொண்டிருக்கையில் கதிரவனின் துயில் மெல்ல கலைந்தது. மேகங்கள் சூழ்ந்த வானம் அழகாக காட்சி தந்தது. சில நிமிடங்களில் பேருந்து நிலையம் வந்தது. பேருந்து நிலையத்தின் எதிரேயுள்ள இடத்திலிருந்து தான் இன்றைய பசுமை நடை பயணம் ஆரம்பம்.

16 ஜூன், 2013

திண்டுக்கல் சிற்பக் கோட்டை...

மதுரையிலிருந்து திண்டுக்கல் வழியாக சேலம் பயணம் செய்யும் போதெல்லாம், எப்படியாது ஒரு முறையாவது திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மலைக்கோட்டைகளை பார்த்துவிட வேண்டும் என ஆவல் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்தது. இப்படித்தான், நமக்கு அருகில் இருக்கும் பல முக்கிய இடங்களை பார்க்காமலேயே சென்று விடுகிறோம். கடந்த வாரம் நண்பர் ஒருவரின் திருமணம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி திருமணத்தில் கலந்து கொண்டு மதிய உணவை முடித்தவுடன் நண்பர்களோடு சென்று மலைக்கோட்டையை பார்த்து வந்தேன்.

மலைக்கோட்டையை பார்த்த பிறகு, மதுரைக்கு அருகில் இருக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை இத்தனை நாள் பார்க்காமல் இருந்து இருக்கிறோமே என்ற உணர்வுதான் ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி இதர விடுமுறை நாள்களில் பல தொலைதூர சுற்றுலாத் தளங்களுக்கு செல்லும் நாம்... நமக்கு அருகில் இருக்கும் முக்கிய இடங்களை காணாமல் இருப்பது தான், அருகிலேயே உள்ள ஊர்களின் மேல் நாம் கொண்டுள்ள பற்று.

31 மே, 2013

விதையிலிருந்தே மரம்... பகுதி - 3

மூன்றாம் நாள் காலை பொழுது புலர்ந்தது. விழித்ததும் மரங்களின் காட்சிகள் கண்களை குளிர்ச்சியாக்கின. சுக்கும் பனை வெல்லமும் கலந்த சூடான பானம் கிடைத்தது. அருந்திவிட்டு அருகிலிருந்த ஆற்றில் குளியல். ஆற்றைச் சுற்றிலும் பச்சை பசேல் என்ற காட்சி பரவியிருந்தது. ஆற்றைவிட்டு வர மனமில்லை. ஆற்றுக் குளியலுக்கு பயந்தவர்கள் கூட இயற்கை குளியல் வாய்ப்பைப் பயன்படுத்திக் குளித்து முடித்தனர். அங்கு குளிக்க வந்த சிறுவர்கள் பலர் ஆற்றில் கர்ணம் அடித்து அசத்தினர். குளியலை முடித்துவிட்டு தங்குமிடம் வந்தடைந்தோம்.  

விதையிலிருந்தே மரம்... பகுதி - 2

காலை ஆறு மணிக்கு எழுந்து குழுவினர் அனைவரும் அகஸ்தியர் அருவியில் குளிக்கச் நடை பயணமாகச் சென்றோம். வழியெங்கும் இயற்கை நிரம்பி வழிந்தது. அருவியில் இருந்து விழுந்த மூலிகை தண்ணீரில் அற்புத குளியல். நீரின் குளிர்ச்சி உடலை சில்லிட செய்தது. உடம்பில் இருந்த சூடெல்லாம் இறங்கியது போல் ஒரு உணர்வு. அருவி குளியலோடு இரண்டாம் நாள்  நனைய துவங்கியது.