15 ஜன., 2015

கதவை மூடு காற்றே வேண்டாம்...

காலை நேரம். கோடைக்கால வெயில் மாதங்களில் ஒன்று. சாலையெங்கும் பனிமூடியது போல வெண்முகில் கூட்டம். விடிந்தும் விடியாது போல இருந்தது. மக்கள் அனைவரும் சாலைகளில் வெள்ளம் போல மாநகர் மற்றும் புறநகர் நோக்கியும் வாகனங்களில் பயணபட்டு கொண்டிருந்தனர். பலரது முகங்களில் மூக்கையும் வாயையும் மூடியவாறும், தலையை மூடியவாறும் கைகுட்டைகள் கட்டப்பட்டிருந்து.