20 மார்., 2016

முத்துப்பட்டி பெருமாள்மலையும் சமணமும்

மதுரைக்கு அருகே உள்ள மலை ஒன்றில் 2000 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள கல்வெட்டுகள் உள்ளன பார்க்க வருகிறாயா ? என மைத்துனரிடம் இருந்து அழைப்பு வந்துது. 2000 வருட பழமை என்றால் நிச்சயம் மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வை தாங்கி இருக்கும் என்பதால், சரி என்றேன். எப்போது பார்க்க செல்கிறோம் என்றேன். நாளை காலை 5 மணிக்கெல்லாம் தயாராக பேருந்து நிலையம் வந்துவிடு என்றார். 

மறுநாள் காலை 5 மணிக்கெல்லாம் தயாராக பேருந்து நிலையம் வந்தடைந்தேன். மழை லேசாக பெய்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மைத்துனரும் அவரது இரு நண்பர்களும் இருசக்கர வாகனங்களில் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களோடு பயணத்தில் நானும் ஐக்கியமானேன். வழியெங்கும் மழைச்சாரல் அடித்துக் கொண்டே இருந்தது.