25 ஜூலை, 2015

பராங்குசப் பேரேரியும் ஏழு கண் மடையும்...

இராசபாளையத்தில் ஜூலை 18,19களில் தமிழக தொல்லியல் கழகத்தின் 25ம் ஆண்டுக் கருத்தரங்கு மற்றும் 26வது ’ஆவணம்’ இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவை மதுரையில் செயல்பட்டு வரும் ‘பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்’ ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. கருத்தரங்கில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலம் மற்றும் இலங்கையிலிருந்தும் தொல்லியல் அறிஞர்கள், ஆராய்சியாளர்கள் வந்திருந்தனர். அவர்களுடைய தொல்லியல் கண்டுபிடிப்பு, அகழ்வராய்வுச் செய்திகள், நிழற்ப்படங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

19 ஜூலை, 2015

குத்தால அருவியிலே குளித்தது போல் இருக்குதா...

சரியாக சூன், சூலை மாதங்களில் குற்றால சீசன் தொடங்கிவிடும். ஆகஸ்ட் மாதம் வரை சீசன் குறையாது. தற்போது பருவகால மாற்றங்கள், மழை பெய்யா எனக் குற்றாலத்தில் நீர் வருவதை காண மக்கள் எந்நேரமும் காத்துகிடக்க வேண்டியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மழை பெய்துவிட்டால் குற்றாலத்தைச் சுற்றி உள்ளவர்களுக்கு கொண்டாட்டந்தான். அவர்களுக்குத்தான் முதலில் செய்தி கிடைக்கும் என்பதால் குற்றாலக் குளியல் அவர்களுக்குத்தான் முதல்வசம். பின் அங்கிருந்து செய்தி பரவி வெளியூர் மக்களுக்குச் சென்றடையும்.