25 நவ., 2012

மேட்டுப்பட்டி சித்தர்மலையும் ’மதிரை’ கல்வெட்டும்...

அதிகாலை – மூடுபனி - குளிர். இப்படியாக கண் விழித்தது இன்றைய விடியல் பொழுது. சாலையெங்கும் லேசான பனி மூடியிருந்தது. இருசக்கர வாகனத்தில் திருமங்கலத்திலிருந்து செக்கானூரணி நோக்கி நண்பர்களுடன் பயணம். இளம் பனியின் குளுமைக்குள் செல்லும் அதிகாலைப் பயணத்தின் அனுபவம் அலாதியானது. இன்றைய பயணம் மதுரைக்கு மேற்கே நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேரணைப் பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பட்டி நோக்கி.
அணைப்பட்டி என்னும் சிற்றூருக்கு அருகில் வைகையாற்றின் தென்கரையில் மகாலிங்கமலை என்றழைக்கப்படும் சித்தர்மலை உள்ளது. இம்மலையில் கி.மு 2’ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி (பிராமி) கல்வெட்டுகளும், கற்படுக்கைகளும் உள்ளன. 2000 வருட பழமையான ஒரு இடத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள சென்றோம். திருமங்கலம் -  செக்காணூரனி – விக்கிரமங்கலம் – பெருமாள்பட்டி வழியாக மேட்டுப்பட்டி நோக்கிச் செல்ல வேண்டும்.

31 அக்., 2012

அரசு பள்ளிகளை சுழற்றும் சாட்டை...

இன்றைய வாழ்வில் சமூகத்தை நோக்கி பலத்திரைப்படங்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன. அதில் ஒன்றோ, இரண்டோ சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைகின்றன. பலத் திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சமாக வந்து செல்கின்றன. திரைப்படங்கள் என்றாலே நம் மனதுக்கு மகிழ்ச்சி தருவாத இருக்க வேண்டும் என்பது இன்றைய அனைவரது கருத்து. உண்மைதான் ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து.
இன்றைய திரைப்படங்கள் என்பது பழையகூத்தின்மேம்பட்ட வடிவமே. கூத்துப் பட்டறையில் இருந்து வந்து வெற்றி பெற்று சாதித்த நடிகர்கள் இன்றும் திரையில் வலம் வந்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். பழைய கூத்தில் நடனத்துடன் கூடிய கதையும், அதில் சிலக் கருத்துக்களும் அமைந்திருக்கும். கூத்தில் இருந்த கலை நயங்கள், கருத்தம்சங்கள் இன்று திரைப்படங்களில் சற்று குறைந்து வருகிறது.

14 அக்., 2012

திருமலாபுரம் ’பசுபதேஸ்வரர்’ குடவரை கோயில்...


பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் இணைந்து வரலாற்றுப் பயணமாக மதுரையிலிருந்து கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணி, திருமலாபுரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா சென்று வந்தோம். பயணத்தில் கழுகுமலை, சங்கரன்கோவில், வீரசிகாமணிக்கு அடுத்து நான்காவதாக திருமலாபுரத்திற்கு சென்றோம். திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி - சேந்தமரம் சாலையில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமலைப்புரம் எனப்படும் திருமலாபுரம்.
திருமலாபுரத்தில் முற்பாண்டியர் காலத்தைச் சேர்ந்த (கி.பி 750) இரண்டு குடைவரை கோயில்கள் அமைந்துள்ளன. திருமலாபுரம் சிற்றூரின் ஊருக்கு வெளியே தெற்குப் பகுதியில் மிக பெரிய நீண்ட மலைக் குன்றுத் தொடர் காணப்படுகிறது. இந்த மலைக்குவருணாச்சி’ மலை என்று பெயர். இவ்வூருக்கு முன்பு வருணாச்சிபுரம் என்ற பெயர் இருந்துள்ளது.

13 அக்., 2012

வீரசிகாமணி கைலாயநாதர் குடைவரை கோயில்...

தலைப்பைச் சேருங்கள்
பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் வரலாற்றுப் பயணமாக கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணி, திருமலாபுரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா செல்லும் பயணத்தில் கழுகுமலை, சங்கரன்கோவிலுக்கு அடுத்து மூன்றவதாக வீரசிகாமணிக்கு சென்றோம். சங்கரன்கோவிலுக்கு வடமேற்கே பத்து மைல் தொலைவில் வீரசிகாமணி அமைந்துள்ளது.
வீரசிகாமணி ஊருக்கு அருகிலுள்ள பெரிய மலைக்குன்றில் குடைவரைக் கோயில் உள்ளது. இக்கோயிலில் காணப்படும் சிவனுக்கு கயிலாயநாதர் என்ற பெயர்.  குடைவரைக் கோவிலுக்கு வெளியே சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் கருவறைக்கு நேர் எதிரே உள்ள மேடையில் நந்தி சிலை வைக்கப்பட்டுள்ளது. கைலாயநாதர் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. குடவரையில் வெளிப்பகுதி மற்றும் முன் மண்டபம் முழுவதும் வெள்ளை மற்றும் காவி வண்ணங்கள் பூசபட்டிருந்தன.

சிவன் விஷ்ணு இணைந்த சங்கரன்கோவில்...


பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன்  இணைந்து வரலாற்றுப் பயணமாக கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணி, திருமலாபுரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா சென்று வந்தோம். முதலில் கழுகுமலையை பார்த்துவிட்டு இரண்டாவதாக சங்கரன்கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். சங்கரன்கோவில் நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதியில் சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள கோவிலில் உள்ள இறைவன் சங்கர நாரயணன் என்று அழைக்கபடுகிறார். சங்கரன்கோவில் ஒரு சிவஸ்தலம்.

7 அக்., 2012

கழுகுமலையில் சமணப்பள்ளி...

வெட்டுவான் கோயிலைப் பார்த்துவிட்டு அங்கிருந்து சமணச் சிற்பங்கள் இருக்கும் மலையை நோக்கி சென்றோம். மலையில் நூற்றூக்கும் அதிகமான சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் காணப்பட்டன. இவ்வளவு சிற்பங்களை இதுவரை சென்ற வேறு எந்த மலையிலும் பார்த்தது இல்லை. முக்குடையின் அமர்ந்திருக்கும் மகாவீரரின் உருவச் சிலை ஒரே அளவில் வரிசையாக மூன்று வரிசையில் வெட்டப்பட்டுள்ளன.
மேலே காணப்படும் வரிசையில் மற்ற வரிசையில் காணப்படும் அளவைவிச சற்று சிறிதாக 25க்கும் மேற்பட்ட மகாவீரரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. கீழே காணப்படும் இரண்டு வரிசைகளிலும் ஒரே அளவில் 34 சிலைகள் காணப்படுகின்றன. சிலைகளுக்கு நடு மத்தியில் ஐந்துதலை நாகத்தின் கீழ் பார்சுவநாதர் சிலை ஒன்றும் வடிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிற்பங்களின் கீழும் அதனை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாக வட்டெழுத்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.

6 அக்., 2012

கழுகுமலை வெட்டுவான் கோவில்...

மதுரையைச் சுற்றிய மலைகளுக்கு மாதம் ஒரு முறை, விடுமுறை நாளான ஞாயிறு காலை பசுமை நடைக் குழுவினரோடு சென்று மலைகளில் உள்ள வரலாற்றுச் செய்திகளை அறிந்து வருவது வாடிக்கை. ஒரு மாற்றத்திற்காக வேறு சில ஊர்களில் உள்ள மலைகளையும் அவைகளில் பொதிந்துள்ள வரலாற்றுத் தகவல்களை அறிந்து வருவோம் என பசுமை நடை குழுவினரிடமும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவிடமும் நண்பர்கள் சிலர் எங்கள் விருப்பத்தை முன் வைத்தோம்.
சாந்தலிங்கம் அய்யா மதுரையில் செயல்பட்டு வரும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளராக இருக்கிறார். அதன் பயனாக இந்த மாதம் (30.09.2012 ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு மாணவர்கள் சிலரும், பசுமைநடை நண்பர்கள் சிலரும் இணைந்து வரலாற்றுப் பயணமாக கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணிபுரம், திருமலாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் என 5 வரலாற்று இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவாக சென்று வந்தோம்.

27 ஆக., 2012

மாடக்குளம் கண்மாயும் சித்திரமேலி குழுவும்...

இந்த மாதம் (ஆகஸ்டு 26, 2012) வரலாற்றை அறிந்து கொள்ளும் பயணமாக மாடக்குளம் கண்மாய்க்குபசுமை நடைகுழுவோடு இணைந்து சென்று வந்தேன். அதிகாலையிலேயே நண்பர்களோடு சேர்ந்து பைப்பாஸ் ரோட்டில் உள்ள நட்ராஜ் தியேட்டர்க்கு அருகில் சந்திப்பு இடம் கூறப்பட்டிருந்தது. 6.30 மணியளவில் பசுமை நடை நண்பர்கள் அனைவரும் சந்திக்கும் இடம் வந்து சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து மாடக்குளம் சிற்றூர் வழியாக கண்மாய் அமைந்துள்ள பகுதியை நோக்கி சென்றோம்இங்குள்ள பெரிய கண்மாயின் பெயரால் இவ்வூரே மாடக்குளம் என்று அழைக்கப்படுகிறது. 
மாடக்குளம் சிற்றூர் மக்கள் எங்கள் அனைவரையும் பார்த்து திகைத்து நின்றனர். இவ்வளவு பேர் கூட்டமாக எங்கே செல்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினர். உங்கள் ஊர் கண்மாயை பார்க்க போகிறோம் என்றோம். அவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தினர். அந்த கம்மாக்குள்ள என்னத்த பாக்க போறீக என்றனர். அங்கு பாண்டியர் கால வரலாற்று தகவல்கள் உள்ளது, அதத்தான் பாக்க போறோம் என்றோம். சிற்றூரை கடந்து கண்மாய் கரையை வந்தடைந்தோம்.

28 ஜூலை, 2012

கீழக்குயிக்குடி செட்டிப்புடவும் மகாவீரர் சிற்பமும்...

மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் நாகமலைப் புதுக்கோட்டை என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூரின் தெற்கு பகுதியில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் சமணமலை அமைந்துள்ளது. கீழக்குயில்குடி சிற்றூருக்கு அரை கி.மீ முன்னரே சமணமலை அமைந்துள்ளது. கீழக்குயில்குடி மலைக்கு தென்கிழக்கு பகுதியில் அமைதுள்ளது செட்டிப்புடவு. 

மலைக்கு கீழே குளத்திற்கு அருகில் அமைதுள்ள அய்யனார் கோவிலில் இருந்து தென் திசை நோக்கி செட்டிபுடவிற்கு  செல்ல வேண்டும். பாதையின் இருபுறமும், மலையை ஒட்டிய வாறும் மரங்கள் நிறைந்துள்ளது. செட்டிபுடவு நோக்கிச் செல்லும் போது பாதையின் இடது புறத்தில் மற்றுமொரு அழகிய தெப்பக்குளம் ஒன்று குறைவான நீரோடு காட்சி தந்தது. செட்டிப்புடவு பகுதியை நெருங்கியதும் மலையில் நீண்ட படிகள் அழகாக வெட்டப்பட்டிருந்தன. சுமார் 100 படிகள் மலையை ஒட்டியவாறு அமைந்திருந்தது. படிகளில் ஏறி மேலே சென்றால்... 

கீழக்குயில்குடியும் சமண பள்ளியும்...

எங்கள் ஊருக்கு அருகே உள்ள மலைக் குன்றுகளில் கீழக்குயில்குடி சமணமலையும் ஒன்று. திருமங்கலத்தில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது. மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் நாகமலைப் புதுக்கோட்டை என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூரின் தெற்கு பகுதியில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் சமணமலை அமைந்துள்ளது. கீழக்குயில்குடி சிற்றூருக்கு அரை கி.மீ முன்னரே மலை அமைந்துள்ளது. இயற்கையின் பல்வேறு வடிவங்களை அங்கே ஒருமிக்க காண முடிந்தது.

24 ஜூன், 2012

கலைகளைப் போற்றுவோம்...

”  அழிந்த கலைகளை மீட்பதும்,

    நலிந்த கலைஞர்களை காப்பதும் நமது கடமை..  ”

தமிழில் கலை என்பதற்கு கற்றற்கு உரியவை எல்லாம் கலை என்ற பொது வரையறை தரப்படுகிறது. எனினும் உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்ந்த ஓவியம் முதலியவற்றை மட்டுமே கலை என்று சிறப்பித்து வழங்குதல் பொருந்தும் என்னும் தமிழ் அறிஞர் மு.வரதராசனாரின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. பொது வழக்கிலும் மு. வரதராசனாரின் கூற்றுக்கமையவே கலை என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது அந்த வழக்கம் பழைய கற்றலுக்கு உரியவை எல்லாம் கலை என்ற பொருளிலும் எடுத்தாளப்படுகின்றது.

6 ஜூன், 2012

நினைவைவிட்டு நீங்காத பள்ளி நாட்கள்...

காலை எட்டு மணிக்குத் தெருவின் அனைத்து வீடுகளிலும் எப்பவும் இல்லாத அளவு ஒரு வேகம். ஒருமாத விடுமுறைக்கு பின் பள்ளி என்றால் அப்படித்தானே இருக்கும். சில குழந்தைகள் தயாரவதில் தாமதமும், அவர்களின் பெற்றோர் அதட்டல்களும் என ஏக களேபரமாகவே இருந்தது. பள்ளிக்கு செல்ல குழந்தைகளிடம் உள்ள அவசரத்தை விட அவர்களை அனுப்புவதில் பெற்றோர்களின் அவசரமே அதிகமாக தெரிந்தது.

25 ஏப்., 2012

அழகர் மலையும் பாறை ஓவியங்களும்...

அழகர்மலையில் உள்ள பாறை ஓவியங்கள் சமணர்கள் வருகைக்கு முன்பே மலை வாழ்மக்கள் சிலர் வாழ்ந்துள்ளதை கூறுகிறது. இவர்கள் அனைவரும் வேட்டைச் சமூகமாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் உணவிற்காக விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்து வந்துள்ளனர். இந்த பாறை ஓவியங்கள் பற்றி பேராசியர் கண்ணன் அவர்களின் உரையிலிருந்து சில...