27 பிப்., 2013

திருப்பரங்குன்றம் காசி விசுவநாதர் கோயில் கல்வெட்டு...

எங்கள் ஊருக்கு அருகிலிருக்கும் அழகிய மலைக் குன்று திருப்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மதுரையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் திருமங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் (இடது புறம்) கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு பல முறை சென்றிருந்தாலும், மலைமீது செல்லாதது ஒரு குறையாகவே இருந்து வந்தது. மலைமீது சிக்கந்தர் சுல்தான் பள்ளிவாசல் மற்றும் காசி விசுவநாதர் கோவில் என திருப்பரங்குன்றம் மலை சமயங்களின் நல்லிணக்கப் பகுதியாக திகழ்ந்து வருகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவதாக கருதப்படும் திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தமிழிக் (பிராமி) கல்வெட்டுகள் மூலம் அதனை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மலைமீதுள்ள காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள சுனையில் 2000 வருட பழமையான தமிழிக் (பிராமி) கல்வெட்டு ஒன்று சென்ற மாதம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் 2000 வருடங்களுக்கு முன்னரே மனிதர்கள் இங்கு தங்கி வாழ்ந்துள்ளனர் என்ற் வரலாற்றுச் செய்தியை அறிந்துகொள்ள முடிகிறது. இத்தனை சிறப்புகள் வாய்ந்த வரலாற்றுப் பகுதிக்கு பசுமை நடை மூலம் சென்று அவைகளை எல்லாம் கண்டு வருவதற்கு வாய்ப்பு கிடைத்தது, பெரும் மகிழ்வை தந்தது.

16 பிப்., 2013

கலைகளில் ஒரு புதுமை ‘ஜிக்காட்டம்’...

கலை என்பதற்கு, கற்பதற்குரியவை அனைத்தும் கலை எனப்படுகிறது. எளிமையாக கற்கக்கூடிய செயல்களை கலைகள் என்றும், நீண்ட கால பயிற்சி முறைகளை கொண்டு அடக்கியவைகளை நுண்கலைகள் என்று அழைத்தனர். ஆதிகாலங்களில் மனிதர்கள் கலையை அதிகம் போற்றி வளர்த்தனர். மனிதர்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயல்களுக்கும் ஏற்றவாறு ஒரு கலை தொடர்ப்பில் இருந்துள்ளது. இயல், இசை மற்றும் கூத்து (இன்று நாடகமாக மாறியுள்ளது) போன்றவைகள் கலைகளின் தொகுப்பாக அமைகிறது.
கலையை ரசிக்க யாரும் சொல்லியோ, பழகியோ தரவேண்டியதில்லை, அது நம் ரத்தத்தில் கலந்துள்ளது. எங்காவது கலை நிகழ்ச்சிகளின் ஆட்டம் பாட்டமோ, அல்லது சத்தமோ வந்துவிட்டால் நம்மையறியாமல் ஒலி வரும் திசை நோக்கி நகர்வோம். இது இயல்பு. அந்த அளவிற்கு நாட்டுப்புறக் கலைகள் நம் வாழ்வோடு ஒருங்கிணைந்துள்ளது.
இன்று நாட்புறக்கலைகளை பார்க்க வேண்டும் என்றாலே...