6 செப்., 2015

நீர்நிலைகள் நீரைச் சேமிக்கவே...

கண்மாய்கள் இருந்த பகுதிகளில், ஆறுகள் ஓடியப் பகுதிகளில் எல்லாம் இன்று லாரிகள் நீரைச் சுமந்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. கண்மாய்கள், ஏரிகள், குளங்களெல்லாம் மூடப்பட்டு விலை நிலங்கள், சாலைகள், குடியிருப்புப் பகுதிகள், பெரும் அங்காடிகள், அரசு கட்டிடங்கள் என கான்கீரிட் காடுகளாகவே வளர்ந்து நிற்கின்றன. இத்தனைக்கு மத்தியிலும் நீரைச் சேமிக்க வேண்டும், நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற வாசகங்களின் கூக்குரல் உரக்க... உரக்கச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால், அவையனைத்தும் மனிதமற்ற, மரங்களற்ற வெட்டவெளிப் பகுதிகளில் எதிரொலியாக மட்டுமே ஒலித்துக்கொண்டு உள்ளது.