28 ஜூன், 2015

திருப்பரங்குன்றம் அமன்பாழி கற்படுகைகள்...

சென்ற வாரம் காலையில் திருப்பரங்குன்றம் வரை நானும் நண்பரும் சென்றிருந்தோம். திருப்பரங்குன்றம் மதுரையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் மதுரை – திருமங்கலம் சாலையில் அமைந்துள்ளது. மலையின் மேற்குப் பகுதியில் தொடர்வண்டி நிலையத்திற்கு எதிரில் மலையில் இயற்கையாக அமைந்த குகைத்த தளம், சமணத்துறவிகள் தங்குவதற்கு வெட்டப்பட்ட கற்படுக்கைகள், தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் என பல வரலாற்றுத் தகவல்களை இம்மலை தன்னகத்தே கொண்டுள்ளது. திருப்பரங்குன்ற மலையைச் சுற்றி வரும் வழியில் தென்பரங்குன்றத்தில் குடைவரைக்கோயில் ஒன்றுள்ளது. இவை அனைத்தையும் கண்டுவர வேண்டும் எனச் சென்றிருந்தோம். தொன்மையான வரலாற்றுச் செய்திகளைக் காண பயணத்தோம்.

தென்பரங்குன்றம் குடைவரைக் கோயில்.

திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி செல்லும் சாலையில், சாலையின் இடது புறத்தில் குடைவரைக்கு செல்லும் வழிக் காணப்பட்டது. குடைவரைக்குச் செல்லும் வழியில் பூங்கா ஒன்று  அழகாக காணப்பட்டது. நாங்கள் சென்ற நேரம் பூங்காவில் ஆங்காங்கே காதலர்கள் அமர்ந்திருந்தனர். மலையில் குடைவரைச் சற்று உயரத்தில் காணப்பட்டது. மேலே செல்வதற்கு வசதியாக படிகள் செய்து தரப்பட்டிருந்தது.

14 ஜூன், 2015

குப்பல்நத்தமும் பொய்கைமலை சிற்பங்களும்...

மதுரை மாவட்டம் சேடப்பட்டிக்கு அருகில் 4 கிலோ மீட்டர் தொலைவில் குப்பல்நத்தம் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. திருமங்கலத்திலிருந்து 30 கி..மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு திருமங்கலம் – தே.கல்லுப்பட்டி சாலையில் ஆலம்பட்டியை அடுத்து வலது புறமாக சேடப்பட்டிக்கு பிரிந்து செல்லும்  சாலை வழியாகவும், மற்றொன்றாக திருமங்கலம் – உசிலம்பட்டி சாலையில் இருந்து தங்களாச்சேரிக்கு பிரிந்து செல்லும் சாலை வழியாகவும் குப்பல்நத்தம் செல்லலாம்.
குப்பல்நத்தம் பொய்கை மலையில் தென்பக்கச் சரிவில் தொல்லியல் கல்வெட்டுகளும், சமணச் சிற்பங்களாக பார்சுவநாதர், பாகுபலி போன்ற சமணச் சிற்பங்களும் மற்றும் அதன் கீழே தெளிவற்ற நிலையில் சிதைந்த கல்வெட்டு ஒன்றும் காணப்படுவதாக வரலாற்றுச் செய்தியை படித்துள்ளேன். இதனை மதுரை தொல்லியல் வரலாற்று நூல் மூலம் அறிந்தேன். இச்செய்தியைக் கேள்விபட்ட நாள் முதலே ஒருநாள் குப்பல்நத்தம் செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன். இதனை நண்பர்களிடமும் கூறியிருந்தேன். நேற்று நண்பகல் கடந்த மாலைப் பொழுதில் நண்பர்கள் இருவருடன் இணைந்து குப்பல்நத்தம் சென்று வந்தேன்.