26 ஜன., 2014

தொல்நகரில் தொல்லியலாளருடன்...

" தொல்லியல் மீதான காதலை விதைத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவுடன் ஒரு கலந்துரையாடல். சாந்தலிங்கம் அய்யா பசுமைநடைப் பயணங்களின் ஊடாக கல்வெட்டுகளைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள காரணமானவர். "
பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளிவந்த கதிர் 2014’  மலருக்காக அய்யா அவர்களை சந்தித்து ஒரு சிறு கலந்துரையாடலை நண்பர் சித்திரவீதிக்காரருடன் சேர்ந்து ஏற்பாடு செய்தேன். கலந்துரையாடலில் அய்யாவிடம் பல வரலாற்று முக்கிய கேள்விகளை முன் வைத்தோம். அய்யா அவர்களும் மிகச்சிறப்பாக நமக்கு விளக்கம் தந்தார். அந்த கலந்துரையாடலை இங்கு உங்கள் முன் வைப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
இதோ அய்யா அவர்களுடன் கலந்துரையாடல் ஆரம்பம்...

5 ஜன., 2014

வேர்களை விட்டு விலகிடாமல் இருந்திடுவோம்...

கிளைகள் எவ்வளவு தூரம் படர்ந்திருந்தாலும் வேர்களைவிட்டு விலகி இருக்க முடியாது. மனிதர்களும் அப்படித்தான். எவ்வளவு தூரம் பொருள் தேட சென்றிருந்தாலும் நம் குடும்பத்தைவிட்டு விலகி இருக்க முடியாது. குடும்ப விழாக்கள், பண்டிகைகளில் கலந்துகொள்ள எங்கிருந்தாலும், வீட்டிற்கு வந்து நம் சுற்றத்தோடு கொண்டாடுவது நம்மவர்களின் பழக்கம். பல்வேறு வகையான பண்டிகைகள் இருந்தாலும் அதில், தைப்பொங்கல் முக்கியமானது. மற்ற பண்டிகைகள் இறைவழிபாட்டோடு தொடர்பு கொண்டிருந்தாலும், பொங்கல் பண்டிகை மட்டும் தனித்து நம்மைக் காக்கும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் திருவிழாவாக அமைந்திருக்கிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையை விதைக்கும் திருநாளாகவும் திகழ்கிறது.