31 அக்., 2012

அரசு பள்ளிகளை சுழற்றும் சாட்டை...

இன்றைய வாழ்வில் சமூகத்தை நோக்கி பலத்திரைப்படங்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன. அதில் ஒன்றோ, இரண்டோ சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைகின்றன. பலத் திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சமாக வந்து செல்கின்றன. திரைப்படங்கள் என்றாலே நம் மனதுக்கு மகிழ்ச்சி தருவாத இருக்க வேண்டும் என்பது இன்றைய அனைவரது கருத்து. உண்மைதான் ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து.
இன்றைய திரைப்படங்கள் என்பது பழையகூத்தின்மேம்பட்ட வடிவமே. கூத்துப் பட்டறையில் இருந்து வந்து வெற்றி பெற்று சாதித்த நடிகர்கள் இன்றும் திரையில் வலம் வந்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். பழைய கூத்தில் நடனத்துடன் கூடிய கதையும், அதில் சிலக் கருத்துக்களும் அமைந்திருக்கும். கூத்தில் இருந்த கலை நயங்கள், கருத்தம்சங்கள் இன்று திரைப்படங்களில் சற்று குறைந்து வருகிறது.

14 அக்., 2012

திருமலாபுரம் ’பசுபதேஸ்வரர்’ குடவரை கோயில்...


பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் இணைந்து வரலாற்றுப் பயணமாக மதுரையிலிருந்து கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணி, திருமலாபுரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா சென்று வந்தோம். பயணத்தில் கழுகுமலை, சங்கரன்கோவில், வீரசிகாமணிக்கு அடுத்து நான்காவதாக திருமலாபுரத்திற்கு சென்றோம். திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி - சேந்தமரம் சாலையில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமலைப்புரம் எனப்படும் திருமலாபுரம்.
திருமலாபுரத்தில் முற்பாண்டியர் காலத்தைச் சேர்ந்த (கி.பி 750) இரண்டு குடைவரை கோயில்கள் அமைந்துள்ளன. திருமலாபுரம் சிற்றூரின் ஊருக்கு வெளியே தெற்குப் பகுதியில் மிக பெரிய நீண்ட மலைக் குன்றுத் தொடர் காணப்படுகிறது. இந்த மலைக்குவருணாச்சி’ மலை என்று பெயர். இவ்வூருக்கு முன்பு வருணாச்சிபுரம் என்ற பெயர் இருந்துள்ளது.

13 அக்., 2012

வீரசிகாமணி கைலாயநாதர் குடைவரை கோயில்...

தலைப்பைச் சேருங்கள்
பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் வரலாற்றுப் பயணமாக கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணி, திருமலாபுரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா செல்லும் பயணத்தில் கழுகுமலை, சங்கரன்கோவிலுக்கு அடுத்து மூன்றவதாக வீரசிகாமணிக்கு சென்றோம். சங்கரன்கோவிலுக்கு வடமேற்கே பத்து மைல் தொலைவில் வீரசிகாமணி அமைந்துள்ளது.
வீரசிகாமணி ஊருக்கு அருகிலுள்ள பெரிய மலைக்குன்றில் குடைவரைக் கோயில் உள்ளது. இக்கோயிலில் காணப்படும் சிவனுக்கு கயிலாயநாதர் என்ற பெயர்.  குடைவரைக் கோவிலுக்கு வெளியே சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் கருவறைக்கு நேர் எதிரே உள்ள மேடையில் நந்தி சிலை வைக்கப்பட்டுள்ளது. கைலாயநாதர் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. குடவரையில் வெளிப்பகுதி மற்றும் முன் மண்டபம் முழுவதும் வெள்ளை மற்றும் காவி வண்ணங்கள் பூசபட்டிருந்தன.

சிவன் விஷ்ணு இணைந்த சங்கரன்கோவில்...


பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன்  இணைந்து வரலாற்றுப் பயணமாக கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணி, திருமலாபுரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா சென்று வந்தோம். முதலில் கழுகுமலையை பார்த்துவிட்டு இரண்டாவதாக சங்கரன்கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். சங்கரன்கோவில் நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதியில் சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள கோவிலில் உள்ள இறைவன் சங்கர நாரயணன் என்று அழைக்கபடுகிறார். சங்கரன்கோவில் ஒரு சிவஸ்தலம்.

7 அக்., 2012

கழுகுமலையில் சமணப்பள்ளி...

வெட்டுவான் கோயிலைப் பார்த்துவிட்டு அங்கிருந்து சமணச் சிற்பங்கள் இருக்கும் மலையை நோக்கி சென்றோம். மலையில் நூற்றூக்கும் அதிகமான சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் காணப்பட்டன. இவ்வளவு சிற்பங்களை இதுவரை சென்ற வேறு எந்த மலையிலும் பார்த்தது இல்லை. முக்குடையின் அமர்ந்திருக்கும் மகாவீரரின் உருவச் சிலை ஒரே அளவில் வரிசையாக மூன்று வரிசையில் வெட்டப்பட்டுள்ளன.
மேலே காணப்படும் வரிசையில் மற்ற வரிசையில் காணப்படும் அளவைவிச சற்று சிறிதாக 25க்கும் மேற்பட்ட மகாவீரரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. கீழே காணப்படும் இரண்டு வரிசைகளிலும் ஒரே அளவில் 34 சிலைகள் காணப்படுகின்றன. சிலைகளுக்கு நடு மத்தியில் ஐந்துதலை நாகத்தின் கீழ் பார்சுவநாதர் சிலை ஒன்றும் வடிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிற்பங்களின் கீழும் அதனை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாக வட்டெழுத்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.

6 அக்., 2012

கழுகுமலை வெட்டுவான் கோவில்...

மதுரையைச் சுற்றிய மலைகளுக்கு மாதம் ஒரு முறை, விடுமுறை நாளான ஞாயிறு காலை பசுமை நடைக் குழுவினரோடு சென்று மலைகளில் உள்ள வரலாற்றுச் செய்திகளை அறிந்து வருவது வாடிக்கை. ஒரு மாற்றத்திற்காக வேறு சில ஊர்களில் உள்ள மலைகளையும் அவைகளில் பொதிந்துள்ள வரலாற்றுத் தகவல்களை அறிந்து வருவோம் என பசுமை நடை குழுவினரிடமும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவிடமும் நண்பர்கள் சிலர் எங்கள் விருப்பத்தை முன் வைத்தோம்.
சாந்தலிங்கம் அய்யா மதுரையில் செயல்பட்டு வரும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளராக இருக்கிறார். அதன் பயனாக இந்த மாதம் (30.09.2012 ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு மாணவர்கள் சிலரும், பசுமைநடை நண்பர்கள் சிலரும் இணைந்து வரலாற்றுப் பயணமாக கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணிபுரம், திருமலாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் என 5 வரலாற்று இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவாக சென்று வந்தோம்.