27 ஜன., 2013

கலை இலக்கிய இரவு...

பொழுது விடிந்தது முதல் பொழுது அடையும் வரை ஒடும்... வாழ்க்கையின் வேகத்தை அளக்கும் கருவி ஒன்றுதான் இல்லை. இருந்துவிட்டால் தெரிந்துவிடும் எவ்வளவு வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றோம் என்று. இன்றைய பொருளாதார தேவையினை இலக்காக கொண்டு ஓடும் இந்த ஒட்டத்தில், வெற்றி இலக்கை மட்டும் அவரவர் நிர்ணயித்து கொள்கின்றனர். இப்படிபட்ட எந்திர யுகத்தில் இயற்கையின் மாற்றமும், சமூக கட்டமைப்பின் மாற்றமும் மாறிக் கொண்டே வருகிறது.

இவைகளை நமது வேகத்தில் பார்த்துக் கொண்டிருப்பது என்பது இயலாததுதான். இயலாது என்பதால் தான், இன்று நாம் பல விடயங்களை அறிந்துகொள்ள முடியாமால் கடந்து சென்று கொண்டிருக்கிறோம், அதனதன் தேவையை உணராமல்... நாம் நின்று கவனிக்கும் பொழுது அவற்றில் பல நம் கண்களுக்கு மிகத்தொலைவில் இருப்பதை உணருவோம்... பலருக்கு தெரியாமல் போகவும் வாய்ப்புண்டு.

12 ஜன., 2013

சுயநலத்தின் ஆற்றாமை...

பருவமழை பொய்த்துப்போனது. . .
காவிரியும் பெரியாறும்
தடைபட்டுப்போனது. . .
எங்கள் பயிர்களெல்லாம்
நீரின்றி வாடிப்போனது. . .

இயற்கை வாழ்வை - மறந்து
செயற்கை வாழ்வைத் தேடியதால்
அறுவடை திருநாள் என்பது
எங்களிடம் இருந்து
அறுபட்டு போகுமோ ???

6 ஜன., 2013

குடுமியான்மலையும் மேலக்கோயில் குடைவரையும்...

பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் ஏற்பாடு செய்த ஒரு நாள் சுற்றுலாப் பயணத்தில் முதலாவதாக மதுரை - திருச்சி சாலையில் விராலிமலைக்கு சற்று முன்பாக அமைந்துள்ள கொடும்பாளூர் ‘மூவர் கோயிலுக்கு’ சென்றுவிட்டு, இரண்டாவதாக புதுக்கோட்டை மணப்பாறை செல்லும் சாலையில் அமைந்துள்ள குடுமியான்மலைக்குச் சென்றோம். குடுமியான்மலை மணப்பாறையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மூவர் கோவிலைப் பார்த்துவிட்டு, குடுமியான்மலை ஊரில் அமைந்துள்ள மலைப்பகுதிக்குச் சென்றோம். வெயில் சற்று கம்மியாக இருந்தது, மலையில் ஏற உதவியாக இருந்தது. மலை மிக அழகாக காட்சி தந்தது. மலையின் தென்புறச் சரிவில் இயற்கையாக அமைந்துள்ள குகைத்தளத்தை நோக்கி அனைவரும் நடந்தோம். மலை சற்று வழுவழுப்பாகவும் சறுக்கலாகவும் இருந்தது. வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆவலில் கவனமாக ஏறினோம். நண்பர்கள் சிலர் ஏற முடியாதவர்களுக்கு உதவி செய்தனர்.

5 ஜன., 2013

கொடும்பாளூர் மூவர்கோயில் கற்றளி...



பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் இணைந்து வரலாற்றுப் பயணமாக கடந்த செப்டம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சுற்றியுள்ள சில வரலாற்று இடங்களுக்கு சென்று வந்தோம். அதே போல், இந்த மாதமும் (23.12.2012 ஞாயிற்றுக்கிழமை) மதுரையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொடும்பாளூர், குடுமியான்மலை, சித்தன்னவாசல், புதுக்கோட்டை அருங்காட்சியகம் மற்றும் திருமயம் ஆகிய 5 இடங்களுக்கு ஒரு நாள் வரலாற்று சுற்றுலா பயணமாக சென்று வந்தோம்.

பயணத்தில் முதலாவதாக மதுரை - திருச்சி சாலையில் விராலிமலைக்கு சற்று முன்பாக அமைந்துள்ள கொடும்பாளூர் சத்திரம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள ‘மூவர் கோயிலுக்கு’ சென்றோம். கொடும்பாளூர் மணப்பாறையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மூவர்கோயிலானது கொடும்பாளூர் சத்திரம் சிற்றூருக்கு கிழக்கு பகுதியில் இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.