31 மே, 2014

கற்காலத்து கல்லறைகள் ...

மனிதன் தான் வாழும் காலத்தில் காணமுடியாத இரு இடங்கள் இப்புவியில் உள்ளது. ஒன்று தான் கருவாக முதலில் உருவாகி உயிர்வாழ்ந்த தாயின் கருவறை. மற்றொன்று தான் இறந்த பிறகு, தனக்காக உருவாக்கப்படும் கல்லறை. இந்த இரு இடங்களும் நம் வாழ்வின் மிக முக்கியமான இடங்கள். தாயின் கருவறை வரலாற்றை உருவாக்கும் ஒருவரைச் சுமக்கும் இடமாக இருந்தால், கல்லறை வாழ்ந்த ஒருவரின் வரலாற்று நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் இடமாக இருக்கிறது. வரலாற்றில் மன்னர்கள், படைத்தளபதிகள், இனக்குழுத் தலைவர்கள், ஆன்மீகவாதிகள், போன்றோர்களுக்கு மட்டுமே கல்லறைகள் அமைக்கப்பட்டு வந்துள்ளது.