
கலை என்பது மனிதனுடைய வாழ்வின் பிரதிபலிப்பு. தான் வாழ்ந்து வந்த வாழ்வியலைப் ஓவியங்களாக பதிவு செய்துள்ளனர். விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற ஓவியங்கள் வரைவதால், அதிக விலங்குகள் வேட்டையில் கிடைக்கும் என்பதை அவர்கள் நம்பியிருந்தனர். 1300 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டும் மிக அண்மையில் வரையப்பட்டவை போன்று இவ்வோவியங்கள் தோற்றமளிப்பது நம்மை வியப்படையச் செய்கிறது.

சமணர்கள் இந்த பாறை ஓவியங்களை பாதுகாத்துள்ளனர். அவர்கள் அதனை அழிக்க முயலவில்லை. ஆனால் கடந்த 2300 ஆண்டுகளாக காலத்தால் அழியாது காக்கப்பட்டு இருந்து வந்த இந்த ஓவியங்கள் கடந்த 30 - 50 ஆண்டுகளுக்குள் தான் அழிக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாக தெரிகிறது.
இவைகளை நாம் பாதுகாக்க வேண்டும், இல்லையென்றால் இது போன்ற ஓவியங்கள் இருந்தது என்பதை நாம் பிற்காலங்களில் புத்தகங்கள் வாயிலாக தெரிந்துகொள்ள வேண்டிய நிலை ஏறபடும். எனவே ‘இந்த பாறை ஓவியங்களை பாதுகாக்க வேண்டும்’ என்ற கருத்தை நம்மிடம் இருந்து நாம் துவக்க வேண்டும். மற்றவர்களை பாதுகாக்க கூறுவதில் பயன் இல்லை.
இந்த ஓவியங்களின் தொன்மை தெரியாமல் இந்த இடத்தில் கண்டதைக் கிறுக்கி வைப்பதிலிருந்து காப்பாற்ற வேண்டும். அதிலும் இதுபோன்ற இடங்களுக்கு வருபவர்கள் சரித்திரத்தில் இடம்பெறும் நோக்கில் பெயிண்ட், ப்ரஷூடன் வந்து தங்கள் பெயர்கள் மற்றும் காதல் சின்னங்களை பதிந்து செல்கின்றனர். இங்கு மட்டுமல்ல, பெரும்பாலான இடங்களில் இதுபோன்ற கிறுக்கல்களைக் காண முடியும். இப்படி கிறுக்கிச் செல்பவர்களை குறை கூறுவது ஒரு புறமிருக்கட்டும்.
இதுபோன்ற இடங்களின் முக்கியத்துவம் குறித்து அப்பகுதி மக்களுக்கு அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள முக்கியமான இடங்களைக் குறித்து அந்தந்த ஊர்க்காரர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கல்விக்கூடங்களில் சொல்லித்தருவது, விளம்பரம் செய்வது என பல நடவடிக்கைகளை அரசு சுற்றுலாத்துறை மூலம் எடுக்க வேண்டும். ஊடகங்களில் ஒவ்வொரு விளம்பர இடைவேளையிலும் இதுபோன்ற விசயங்களைக் குறித்து விளம்பரம் போடும் போதுதான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.
மேலும் படிக்க : ’மதிரை’ பெயர் அழகர் மலை கல்வெட்டில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக